பணம் வாங்காமல் எழுதினேன்.. பெருமை பீத்திய வைரமுத்து..! – பணத்தை விட்டெறிந்த தயாரிப்பாளர்..!!

கவிஞர் வைரமுத்து ( Vairamuthu ) அவர்கள் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய நிழல்கள் எனும் திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் தனது அற்புதமான பாடல் வரிகளால் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார் இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தற்சமயம் நிறைய தேசிய விருதுகளையும் வென்று உள்ளார்.

Vairamuthu

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து ஒரு பெட்டியில் நான் பாரதிராஜாவின் ஒரு படத்தில் பணம் வாங்காமலேயே பாடல்கள் எழுதிக் கொடுத்தேன் என்று பெருமையாக கூறியுள்ளார். அதனை அடுத்து அவர் பெருமையாக சொன்னதை கேட்டு ஒரே படத்தில் அவருக்கு அந்த பணத்தை செட்டில் செய்துள்ளார் ஒரு பிரபலம்.

Vairamuthu

நிழல்கள் படத்தில் ஒரு பொன்மாலைப் பொழுது எனும் பாடலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக தனது வரிகள் மூலம் கவர்ந்து இழுத்தவர் கவிஞர் வைரமுத்து. அந்தப் படத்தில் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவுடன் சேர்ந்து இருவரும் இசையமைத்த பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது.

இதனை அடுத்து இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையே சில மனக்கசப்பான விஷயங்கள் நடந்ததன் மூலம் இருவரும் சேர்ந்து பணியாற்றுவதை தவிர்த்து வந்தனர். இன்று வரை அவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றவே இல்லை. இயக்குனர் பாரதிராஜா உடன் சேர்ந்து இருந்த காலங்களில் தான் இளையராஜாவும் வைரமுத்துவும் சேர்ந்து பணியாற்றி இருந்தனர்.

இப்படி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதன் மூலம் இயக்குனர் பாரதிராஜா கிழக்குச் சீமையிலே எனும் திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பாளராக அந்த படத்தில் கொடுத்திருந்தார் இருவரும் அற்புதமாக அந்த படத்தில் இசையமைத்திருந்தனர்.

Vairamuthu

இந்த நிலையில் கிழக்கு சீமையிலே படத்தை தயாரித்த தாணு அவர்கள் கவிஞர் வைரமுத்து அவரின் வீட்டிற்கு சென்று சம்பலமாக ஐம்பதாயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.

இதற்கு கவிஞர் வைரமுத்து நான் பாரதிராஜா படங்களுக்கு சம்பளம் வாங்காமலேயே பாடல் எழுதிக் கொடுப்பேன். இருந்தாலும் நீ கொடுத்த இந்த பணம் நான் எழுதிய அனைத்து படங்களுக்கும் சேர்த்து கொடுத்து விட்டாய் நீ ஒரு குட்டி தேவர் என்று புகழ்ந்து இருக்கிறார்.

Vairamuthu

பானு அவர்கள் ஒரு பேட்டியில் இதனைப் பற்றி கூறியிருந்தார். தனக்கும் வைரமுத்துவுக்கும் நிறைய முறை மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது இருந்தாலும் திரைப்படத் துறையில் சேர்ந்து பணியாற்றினால் தான் நல்ல ஒரு படத்தை கொடுக்க முடியும் என்பதில் இருவரும் கவனமாக இருப்போம் .

மேலும் அவர் கூறியதாவது நான் வாலி அவர்களின் பிறந்தநாளுக்கு சென்று அவரிடம் ஒரு விளம்பரம் கொடுத்தேன் அதனைப் பார்த்த வாலி இந்த விளம்பரம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது ஆதலால் இனி உன் படத்திற்கு நான் பணம் வாங்கவே மாட்டேன் என்று கூறியிருந்தாராம்.

அதேபோல அவர் எந்த படத்திற்கும் இதுவரை என்னிடம் பணம் வாங்கியது கிடையாது என்று நெகிழ்ச்சியாக கூறினார் தானு.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …