“ப்பா.. என்னா அழகு டா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – சீரியல் நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்..!

பிரபல தொலைக்காட்சி நடிகை வைஷ்ணவி அருள்மொழியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

விஜய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் மாயன் என்ற கதாபாத்திரத்தின் தங்கையாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை வைஷ்ணவி அருள்மொழி.

தமிழகத்தை சேர்ந்த இவர் மதுரை மற்றும் கோவையில் தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்தவர். இவருடைய அம்மா ஒரு ஆசிரியை ஆவார்.

ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்த இவர் சில்லாக்கி டும்மா என்ற யூடியூப் சேனலில் நடிகையாக நடிக்க வாய்ப்பு வந்தது அந்த சேனலில் ஏராளமான கேளிக்கை வீடியோக்களில் நடித்திருந்த இவர் சீரியல் நடிகையாக உயர்ந்தார்.

குறும் படங்கள் சிலவற்றில் நடித்திருந்த இவருக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மலர் என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் ஹீரோவுக்கு தங்கை கேரக்டர் தான். சுவாதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர் தொடர்ந்து பொண்ணுக்கு தங்க மனசு சீரியலில் நடித்தார்.

பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …