என்னது மெய்யாலுமா… மீண்டும் வணங்கான் படப்பிடிப்பு… துவங்கப்படுகிறதா? ஓகே சொல்லி விட்டாரா சூர்யா…!!

தமிழ் இயக்குனர்களில் முக்கியமான வரிசையை பிடித்திருப்பவர் இயக்குனர் பாலா. இவர் திரைப்படங்கள் எல்லாமே மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருப்பதால் அநேகமாக இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் முன்னணி நாயகர்களின் வரிசையை விரைவில் எட்டிப் பிடித்து விடுவார்கள்.

அந்த வரிசையில் தற்போது பாலா இயக்கத்தில் வெளிவர உள்ள படம் தான் வணங்கான் இந்த படத்தில் சூர்யா நடித்து வந்தார். இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டு அப்படியே இருந்தது.

மேலும் நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் போன்ற படங்களை நடித்தவர் இதன் மூலம் இவருக்கு நல்ல பெயர் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் பல திரைப்பட வாய்ப்புகளும் வந்து சேர்ந்தது.

 தற்போது இவர் பாலாவுடன் இணைந்து வணங்கான் படத்தில் நடித்து வரக்கூடிய வேளையில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டியும் கதாநாயகியாக வலம் வர உள்ளார்.

மேலும் மீனவர்கள் பிரச்சனையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்படும் இந்த வணங்கான் திரைப்படத்தில் சூர்யா மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து விட்ட நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு துவங்க தாமதம் ஆகி வந்த நிலையில் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்தது.

இதனை கருத்துக்கள் என்று சொல்வதை விட வதந்திகள் அல்லது சர்ச்சைகளால் என்று கூறலாம். இந்த நிலையில் சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42 படத்தில் சூர்யா நடிக்க தொடங்கினார். இதனுடைய படப்பிடிப்பு கோவாவில் முதற்கட்ட நிலையில் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடந்து வருகிறது.

 இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்குவதற்கு கால தாமதம் ஆகும் என்பதால் தற்போது வணங்கான் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து துவங்கும் படப்பில் படப்பிடிப்பில் ஒரே கட்டமாக பாலா இந்த படப்பிடிப்பை முடித்து விடலாம்.

 அதற்கான திட்டங்களை தற்போது சூர்யா மற்றும் பாலா தீட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு இடையே கசமுசா என்று கூறிவந்த ஊடகங்களின் வாய்களை அடக்கும் விதத்தில் இந்த படப்பிடிப்பு துவங்க இருப்பதால் மாசாக வணங்கான் படத்தின் வெற்றியைக் காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …