“படத்தில் கமிட் ஆன பிறகு அந்த வார்த்தையை கூறுவார்கள்..” – இதயமே நொறுங்கிவிடும்… – வெளிப்படையாக கூறிய வாணி போஜன்..!

சீரியல்களில் நடித்து வந்த நடிகை வாணி போஜன் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சின்னத்திரை நயன்தாரா என்று பெயரெடுத்தவர் நடிகை வாணி போஜன்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட இவர் சினிமாவில் தான் எதிர்கொள்ளும் தர்ம சங்கடமான சூழ்நிலைகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சினிமாவில் அறிமுகமான புதிதில் என்னை படத்தில் நடிக்க கமிட் செய்து விடுவார்கள். அதன்பிறகு படப்பிடிப்புக்கு சென்ற பிறகு இவர் சீரியல் நடிகை தானே இவர்.. எதற்காக படத்தில் கமிட் செய்தீர்கள் என்று என் காது படவே பேசுவார்கள்.

இப்படியான பேச்சுகளை கேட்கும் போது இதயமே நொறுங்கி விடும் அளவிற்கு இருக்கும். எதற்காக இப்படி கூறுகிறார்கள் என்று நான் மிகவும் மன வேதனை பட்டிருக்கிறேன்.

இப்படியே நான்கைந்து படங்கள் எனக்கு தவறிப் போய் விட்டது. அதன் பிறகுதான் ஓ மை கடவுளே திரைப்படத்தில் மீரா கதாபாத்திரம் அன்று கிடைத்தது அதன் பிறகு இப்படியான பிரச்சினைகள் இருப்பதில்லை.

எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கு மிகவும் நன்றி என்று கூறியிருக்கிறார் நடிகை வாணி போஜன். நடிகை என்றால் அது என்ன சீரியல் நடிகை சினிமா நடிகை என்ற பாகுபாடு என்று நடிகை வாணி போஜனின் இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் என்னதான் சினிமா நடிகராக இருந்தாலும் ஒரு நாள் சீரியலில் நடிக்க வேண்டும் ஆனால் சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து தங்களை நிரூபித்து தங்களுக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி அதன் மூலம் சினிமா நடிகைகளை இப்படி மனம் புண்படும்படியாக பேசுவது ஏற்கத்தக்கதல்ல என்று வாணிபோஜனுக்கு ஆதரவாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …