தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருந்து தற்பொழுது சினிமா நடிகையாக உயர்ந்து இருப்பவர் நடிகை வாணி போஜன். சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்தபோது ரசிகர்களால் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டவர்.
தற்போது வெள்ளித்திரையிலும் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். சீரியல் நடிகை என்ற காரணத்தினால் எனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் தவறிப்போய் இருக்கிறது.
படத்தில் கமிட் செய்து விட்டு அதன் பிறகு சீரியல் நடிகை தானே எதற்காக படத்தில் கமிட் செய்தார்கள் என்று கூறி என்னை படத்திலிருந்து நீக்கி இருக்கிறார்கள். இவையெல்லாம் எனக்கு மிகுந்த மன வேதனையை கொடுத்தது என்று என்னுடைய வேதனையை பதிவு செய்திருந்தார் நடிகை வாணி போஜன்.
இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது, இவர் ஏற்று நடித்த மீரா என்ற கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக அமைந்தது.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை வாணி போஜன் கவர்ச்சி என்பது அரைகுறை ஆடைகள் அணிவதில் புடவையிலும் கவர்ச்சியாக தோன்ற முடியும் என்று கூறியிருக்கிறார்.
சமீபகாலமாக மாடர்ன் உடைகளிலும் தோன்றும் நடிகை வாணி போஜன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.