நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் அவருடைய தந்தை விஜயகுமார் ஆகிய இருவருக்கும் இருக்கக்கூடிய வாய்க்கா தகராறு என்ன..? என்று புதிதாக சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
ஒரு கட்டத்தில் தன்னுடைய பெற்றோரின் துணையுடன் சினிமாவில் நடிகையாக அறிமுகமான வனிதா விஜயகுமார். நாட்கள் செல்லச் செல்ல தன்னுடைய குடும்பத்தினரை வெறுக்க தொடங்கினார்.
அதற்கு என்ன காரணம்..? என்று 1008 காரணங்கள் உலவுகிறது. அதைப்பற்றி இந்த பதிவு கிடையாது. ஒரு பேட்டியில் மர்மமான பங்களா ஒன்று இருக்கிறது. அதில் என்ன நடக்கிறது என்பது போன்ற சில அதிர்ச்சிகரமான தகவல்களை வனிதா விஜயகுமார் பகிர்ந்து இருந்தார்.
அது குறித்து பிரபல பத்திரிகையாளரும் அரசியல் விமர்சிகரமான பாண்டியன் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது, வனிதா விஜயகுமார் சொல்லியது உண்மையா..? இல்லையா..? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
விஜயகுமார் மஞ்சுளா தம்பதியினருக்கு தனியாக பங்களா இருந்தது உண்மைதான். அங்கே கிட்டத்தட்ட பத்து படுக்கை அறைகள் இருந்தன.
அங்கு சில ரகசியமான விஷயங்கள் எல்லாம் நடக்கிறது என கூறுவார்கள். ஏனென்றால் நடிகை மஞ்சுளா எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமான ஒரு நடிகை.
அந்த நேரத்தில் மஞ்சுளா விஜயகுமாரின் வீடு ஒரு பவர் ஹவுஸ் ஆக செயல்பட்டது. விஜயகுமார் குடும்பத்தினர் செல்வ செழிப்பு மிக்கவர்கள்.. நல்ல செல்வாக்கு உள்ளவர்கள்.. அவர்கள் வீட்டில் ஒரு குட்டி ராஜாங்கமே நடந்து கொண்டிருந்தது.
அரசு முறை டெண்டர்கள்.. தொழிலதிபர்கள் சந்திக்கும் இடமாக.. சினிமா பைனான்சியர்கள் கலந்து பேசிக் கொள்ளும் இடமாக.. நடிகைகள் ஒப்பந்தம் செய்யும் இடமாக.. என அந்த இடம் மிகவும் பிஸியாகவே இருக்கும் பரபரப்பாகவே இருக்கும்.
ஆனால் மஞ்சுளா மறைவுக்கு பிறகு நாட்கள் செல்ல செல்ல அந்த இடத்திற்கு இருந்த மவுசு போய்விட்டது. அங்கே என்ன விஷயங்கள் நடந்தன என்பது இதுவரை மர்மமாக தான் இருக்கிறது. எனக்கு தெரிந்த வட்டாரங்களிடம் இப்படியான தகவல்கள் எனக்கு கிடைத்திருக்கிறது.
இவ்வளவு ஏன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த வீடு தற்போது பேய் பங்களா போல மாறி கிடக்கிறது. ஒரு விளக்கு ஏற்ற ஆள் இல்லை.. லைட் போட ஆள் இல்லை.. இப்படி இருக்கும் போது மஞ்சுளா பங்களா மர்மம் எல்லாம் பெரிய விஷயமா.. என பதிவு செய்திருக்கிறார் பத்திரிக்கையாளர் பாண்டியன்.