2023ல் வரும் பொங்கல் அன்று தமிழக ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கக்கூடிய தல அஜித்தின் துணிவு திரைப்படமும் தளபதி விஜய்யின் துணிவு திரைப்படமும் ஒரே சமயத்தில் வெளிவருவதால் அனைவரும் பரபரப்பாக அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் காத்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து இந்த படத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
மேலும் வசூலில் எந்த இரண்டு படங்களும் மாஸ் காட்டுமா அல்லது வந்த வழியே தெரியாமல் போகுமா? என்பது பொங்கல் அன்று தெரிந்துவிடும்.
மிக நீண்ட காலத்திற்குப் பிறகு அஜித் மற்றும் விஜய் படங்கள் நேருக்கு நேர் மோதும் படி வரவுள்ளது இந்த ஆண்டில் என்பதால் ரசிகர்களின் குஷிக்கு அளவே இல்லை என்று கூறலாம்.
இதனை அடுத்து வெளிநாட்டில் குறிப்பாக இங்கிலாந்தில் வாரிசு மற்றும் துணிவு படங்களின் முன்பதிவு இந்த இந்த மாதமே தொடங்கப்பட்டு விட்டது.
அதிலும் தமிழகத்தில் ஏறக்குறைய இரண்டு படங்களுக்கும் சரிசமமான தியேட்டர்கள் கிடைத்துள்ள நிலையில் வெளிநாட்டை பொருத்தவரை விஜய்யின் படத்திற்கு தான் அதிக அளவு தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அங்கு வாரிசு படம் தான் ஆதிக்கம் செலுத்துவது போல தெரிகிறது அதற்கு ஏற்றது போல் தான் தற்போது வெளிநாட்டில் ஆரம்பமாகியுள்ள முன்பதிவில் வாரிசு படம் தான் அதிக அளவு வசூலை செய்துள்ளது.
இந்த படங்கள் ரிலீஸ் ஆவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் தற்போது வரை வாரிசு படம் முன்பதிவுத் தொகையாக ரூபாய் 12.25 லட்சம் வசூல் செய்துள்ளதாகவும் துணிவு படம் வெறும் 2.95 லட்சம் மட்டுமே வசூலை ஈட்டி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
இதை எடுத்து இன்னும் சில தினங்கள் கழிந்த பிறகு இதன் உண்மை நிலை என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.