உளுந்து வடை, பருப்பு வடை, கீர வடை என பலவடைகளை சாப்பிட்டு அலுப்பு ஏற்பட்டு விட்டதா? அப்படி உங்களுக்கு அலுப்பு ஆகிவிட்டால் நீங்கள் உங்கள் வீட்டிலேயே வாழைப்பூ வைத்து வடை செய்து சாப்பிட்டால் வித்தியாசமாக இருப்பதோடு உடலுக்கு ஆரோக்கியத்தையும் இது ஏற்படுத்திக் கொடுக்கும்.
அப்படிப்பட்ட இந்த வாழைப்பூ வடையை செய்வதற்கான முறைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பூ வடை செய்வதற்கு தேவையான பொருட்கள்
1.வாழைப்பூ ஒன்று
2.வடை பருப்பு அரை கிலோ
3.சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
4.சோம்பு ஒரு டேபிள் ஸ்பூன்
5.உப்பு தேவையான அளவு
6.கருவேப்பிலை, கொத்தமல்லி பொடி பொடியாக நறுக்கியது.
7.பொரித்தெடுப்பதற்கு எண்ணெய்
8.வரமிளகாய்
9.பச்சை மிளகாய்
செய்முறை
வாழை பூவில் இருக்கும் மகரந்தத்தை நீக்கிவிட்டு பாலிதீன் கவர் போல இருக்கும் அந்தப் பகுதியையும் நீக்கிவிட்டு பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் இதனை நறுக்குவதற்கு முன்பு நன்றாக கழுவி விட்டு மோரில் நறுக்கி போட வேண்டும் இல்லை என்றால் கரை பிடித்து விடும்.
இதனை அடுத்து நீங்கள் வடை பருப்பை குறைந்தது 3 மணி நேரமாவது ஊற விட்டு பிறகு மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு வரமிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த கலவையை நீங்கள் கோர கோரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை அடுத்து நீங்கள் நறுக்கி வைத்திருக்கும் வாழைப்பூவை இதனோடு போட்டு ஒரே ஒரு சுற்று சுற்றி எடுத்தால் போதுமானது.
இப்போது இந்த கலவையை ஒரு பவுலில் மாற்றிய பிறகு பொடியாக வெட்டி வைத்திருக்கும் வெங்காயம், சோம்பு,பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை போட்டு நன்கு பிசைந்து விடுங்கள்.
இதனை அடுத்து அடுப்பில் வானிலையை வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கவும் எண்ணெய் சூடேறிய பிறகு வட்ட வட்டமாக நீங்கள் வடையை தட்டிப்போட்டு பொன் நிறமாக மாறியவுடன் எடுக்கவும்.
இப்போது சூடான சுவையான உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய வாழை பூ வடை தயார். நீங்களும் உங்கள் வீட்டில் இந்த வாடை பூ வடையை செய்து பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று எங்களிடம் பகிருங்கள்.