வீரம் படத்தில் நடித்த குட்டி பாப்பா யுவினா-வா இது..? – ஹீரோயின்களை ஓரம் கட்டுறாங்களே..! – ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் பேபி யுவினா. கடந்த 2013-ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் யுவினா.

அதனை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு மட்டும் ஏழு படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 2014ஆம் ஆண்டு வெளியான நடிகர் அஜித்தின் வீரம் திரைப்படத்தில் சுட்டித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதன்பிறகு மஞ்சப்பை, அதிதி, அரண்மனை, கத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். குறிப்பிடும்படியாக நடிகர் சிவகார்த்திகேயனின் காக்கிச்சட்டை, நடிகர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களால் அறியப்பட்ட நடிகையை யுவினா தற்பொழுது ஹீரோயின் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கிறார்.

இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வீரம் படத்தில் பார்த்த குட்டி பாப்பாவா இது…? என்று வியந்து போயிருக்கிறார்கள். அது எப்படி சினிமாவில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் மட்டும் திடீரென வளர்ந்து விடுகிறார்கள்…?

அவர்கள் திடீரென வந்து விடுகிறார்களா..? அல்லது நாம் மெதுவாக வளர்கிறோமா..? ஒன்னும் புரியவில்லையே..? என்று மண்டையை பிய்த்துக் கொள்கிறார்கள். இவர் சினிமா மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் ஆஸ் ஐ அம் ஸஃப்ரிங் ஃப்ரம் காதல் என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார். மட்டுமில்லாமல் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய இருப்பை உறுதிப் படுத்துகிறார் நடிகை யுவினா.

நடிகையாக மட்டுமல்லாமல் மாடல் அழகியாகவும் வலம் வரும் இவர் பல முன்னணி நிறுவங்களுக்கு மாடலிங்கும் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் விரைவில் ஹீரோயினாகவும் நடிப்பார் போலிருக்கிறதே.! என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …