வடிவேலு எதுக்கு சரிபட்டு வரமாட்டார்..! – முதன் முறையாக வாய் திறந்த இயக்குனர் வெங்கடேஷ்..!

வடிவேலு : பிரபல இயக்குனர் வெங்கடேஷ் தமிழில் மகாபிரபு என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்தார். கடந்த 1996 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் சுகன்யா கூட்டணியில் உருவான இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அதன் பிறகு நடிகர் விஜயின் செல்வா திரைப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் வெங்கடேஷ். அதன் பிறகு நிலவே வா, பகவதி என மேலும் இரண்டு விஜய் படங்களை இயக்கியிருக்கிறார்.

தொடர்ந்து நடிகர் சிம்புவின் தம், குத்து உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார். படங்களை இயக்கி பொதுவெளியில் பிரபலமானதை விடவும் அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் இயக்குனர் வெங்கடேஷ்.

அங்காடி தெரு திரைப்படத்தில் துணிக்கடையின் சூப்பர்வைசராக கருங்காலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் இயக்குனர் வெங்கடேஷ்.

இவர் நடிப்பில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் வாத்தியார். இந்த படத்தில் நடிகர் வடிவேலு காமெடி ட்ராக் செய்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காமெடி வசனம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒன்று.

நடிகர் வடிவேலுவை பார்த்த சிங்கமுத்து நீ அதற்கு சரிப்பட்டு வரமாட்ட என்று திட்டுவார். எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்-ன்னு சொல்லிட்டு திட்டுயா.. என்று கெஞ்சுவார் வடிவேலு.

அப்போது அங்கு வரும் சிங்கமுத்துவின் மனைவி இவன் எதுக்கு சரிப்பட்டு வர மாட்டான் என்று சொல்லுங்கள் என்று கூறுவார். அப்போது தன்னுடைய மனைவியின் காதில் மட்டும் என்ன விஷயம் என்று கிசு கிசுப்பார் சிங்கமுத்து. அதனைக் கேட்ட அவருடைய மனைவி.. ஆமா இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான் என்று கூறுவார்.

கடைசியாக நடிகர் வடிவேலுவின் அப்பாவாக நடித்திருந்த மனோபாலா வந்து என் பையன் எல்லாத்துக்கும் சரிபட்டு வருவான் என்று என்ட்ரி கொடுப்பார். என் பையன் எதற்கு சரிபட்ட வருமாட்டான்னு சொல்லுங்கள் என்று கூறுவார்.

அப்போதும் காரணத்தை சத்தமாக சொல்லாமல் மனோபாலாவின் காதில் மட்டும் கிசு கிசுப்பார் சிங்கமுத்து. இதனைக் கேட்ட மனோபாலா.. ஆமா.. சரி தான்.. என் பையன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று கூறுவார்,

இதனால் குழம்பிப் போன வடிவேலு எதற்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்ன்னு சொல்லுங்க.. எப்ப அடிச்சாலும் ஒரு காரணத்தைச் சொல்லி அடிப்பாங்க அது கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு.. ஆனா இப்போ எந்த காரணமும் சொல்லாம அடிக்கிறாங்களே.. இப்படி அடிச்சா எப்படி பொழப்பு நடத்துவது.. எந்நேரமும் மனசு உறுத்துமே… எதுக்குடா நான் சரிப்பட்டு வரமாட்டேன் சொல்லுங்கடா… என்று அழுதபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்வார்.

இப்படியாக அந்த காட்சி இடம் பெற்று இருக்கும். இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் வெங்கடேஷிடம் இந்த காட்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது அப்படி எதற்கு தான் வடிவேலு சரிப்பட்டு வர மாட்டார் என்று நீங்களாவது கூறுங்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த காட்சி படமாக்கப்பட்டது குறித்து பேசிய இயக்குனர் வெங்கடேஷ்.. இந்த காட்சியை படமாக்கப்படும் பொழுது திடீரென எனக்கு ஒரு யோசனை தோன்றியது. எதற்கு அவர் சரிப்பட்டு வர மாட்டார் என்று சொல்லாமலே விட்டு விடலாம் என்று கூறினேன்.

இந்த விஷயத்தை வடிவேலு சாரிடமும் சொன்னேன். ஆனால் அவர் எதற்கு சரிப்பட்டு வரமாட்டேன் ரசிகர்களுக்கு புரியாமல் போய்விடப் போகிறது. இது ஒர்க் அவுட் ஆகுமா..? என்று கேட்டார்.

அதை எல்லாம் ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள். நீங்கள் எதற்காக சரிப்பட்டு வர மாட்டீர்கள் என்று சொல்லாமலே விட்டு விடலாமே.. என்று கூறினேன். சரி என்று அரைகுறை மனதோடு தான் நடிகர் வடிவேலு அந்த காட்சியை நடித்தார்.

ஆனால், கடைசியாக அந்த காட்சியின் முடிவில் எதுக்கு என்ன காரணம் என்று சொல்லாமல் அடிக்கிறாங்களே மனசு உறுத்துமே என்று கூறுவார். அந்த வசனம் ஸ்கிரிப்டிலேயே கிடையாது. ஸ்பாட்டிலேயே வடிவேலு கூறிய வசனம்.

அந்த வசனம் தான் அந்த ஒட்டுமொத்த காமெடி காட்சியையும் நிறைவடையை செய்தது என்று பேசியிருக்கிறார். ஆனால் எதற்கு சரிப்பட்டு வர மாட்டார்..? என்ற காரணத்தை மட்டும் இயக்குனர் வெங்கடேஷ் சொல்லவே இல்லை. இதனை கேட்ட ரசிகர்கள் அவர் எதற்கு சரிப்பட்டு வர மாட்டார்.. என்று சொல்லவே சொல்லாதீர்கள் அதுதான் அந்த காமெடியின் ஆயுளுக்கு ஆதாரம் என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …