என்னை Light Off பண்ணிதான் அதை பண்ணாரு.. மரத்துக்கு பின்னாடி தான் அது எல்லாம்.. ரகசியம் உடைத்த நடிகை நிர்மலா..!

தமிழ் சினிமாவில் கலர் சினிமா வந்த பிறகு எப்படி பாரதிராஜாவும் பாலச்சந்தரும் நிறைய புது முகங்களை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்களோ அதே போல கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் அதிக புது முகங்களை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சி.வி ஸ்ரீதர்.

ஸ்ரீதர் இயக்கிய படங்களில் நிறைய திரைப்படங்கள் அதிக வரவேற்பு பெற்று இருக்கின்றன. அதில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கிய திரைப்படங்களில் பல நடிகர்களுக்கும் முக்கியமான திரைப்படமாக இருந்தது வெண்ணிற ஆடை திரைப்படம்.

Light Off பண்ணிதான் அதை பண்ணாரு

இந்த திரைப்படத்தில் நிறைய புது முகங்கள் அறிமுகமானார்கள். நடிகை ஜெயலலிதாவிற்கு அந்த திரைப்படம்தான் முதல் திரைப்படமாக இருந்தது வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் அதுதான் முதல் படமாக உள்ளது. அதேபோல வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கும் அந்த படம் தான் முதல் படமாக இருந்தது.

அந்த திரைப்படத்திற்கு பிறகு வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். மூன்றாவது படமே அவருக்கு சிவாஜி கணேசனுடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

இந்த நிலையில் தனது சினிமா அனுபவங்களை ஒரு பேட்டியில் கூறும் பொழுது ஒவ்வொரு நடிகர்கள் குறித்தும் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்திருந்தார் வெண்ணிற ஆடை நிர்மலா. அதில் முக்கியமாக நடிகர் ஜெய்சங்கர் குறித்து சில விஷயங்களை பேசி இருந்தார்.

மரத்துக்கு பின்னாடி தான் அது எல்லாம்.

அப்பொழுது அதிகமாக புகழ்பெற்ற நடிகராக ஜெய்சங்கர் இருந்தார் பொதுவாக எனக்கு பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் பொழுது நிறைய விதிமுறைகள் இருக்கும். அந்த நடிகர்கள் வந்தால் எழுந்து நிற்க வேண்டும்.

அவர்கள் இல்லாத சமயத்தில் கூட சின்சியராக வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் இருக்கும். ஆனால் ஜெய்சங்கர் படத்தில் நடிக்கும் போது அப்படி எந்த ஒரு விதிமுறையும் இருக்காது. மேலும் அவர் பெண்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளக்கூடியவர்.

எங்களுக்கு ஆடைகள் ஏதாவது விலகுகிறது என்று தெரிந்தால் உடனே அங்கு இருக்கும் இயக்குனரை அழைத்து அந்த பெண்ணுக்கு ஆடையை சரி செய்ய வேண்டும் அதற்கு உதவி செய்யுங்கள் என்று கூறிவிடுவார். அப்பொழுது எல்லாம் கேரவன் வசதி கிடையாது என்பதால் ஏதாவது மரத்திற்கு பின்னால் நின்று தான் நாங்கள் ஆடைகளை சரி செய்து கொள்ள வேண்டும்.

எனவே அதற்கான ஏற்பாடுகளை எங்களுக்கு செய்து கொடுப்பார் ஜெய்சங்கர். மூன்றாவது திரைப்படமான லட்சுமி கல்யாணம் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது சிவாஜி கணேசன் உடன் சேர்ந்து நடித்தது மிகவும் பதட்டமாக இருந்தது.

ரகசியம் உடைத்த நடிகை நிர்மலா

அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் எனக்கு முக்கியமான வசனம் ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை சரியாக செய்யாமல் தொடர்ந்து நான் சொதப்பி வந்தேன். அதனை பார்த்த சிவாஜி கணேசன் லைட்டை எல்லாம் ஆப் செய்ய சொல்லிவிட்டு நிதானமாக எனது வாழ்க்கையில் இந்த நிகழ்வு நடந்தால் எப்படி நான் நடந்து கொள்வேன் என யோசிக்க சொன்னார்.

பிறகு அது மாதிரியே நடிக்க சொன்னார் அப்படியெல்லாம் நடிப்பை சொல்லி கொடுத்தவர் சிவாஜி என்று அவர்களை குறித்து அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் வெண்ணிற ஆடை நிர்மலா.

மேலும் மீ டூ பிரச்சனை குறித்து அவர் பேசும்போது மீ டூ பற்றி கேட்டாலே கோபமாக வருகிறது. அந்த பிரச்சனை நடந்து பல வருடங்கள் கழித்து பேசுவதில் என்ன நியாயம் இருக்கு. நடக்கும்போதே குரல் கொடுத்து இருக்க வேண்டும் என சின்மயியை மறைமுகமாக தாக்கியிருந்தார் நிர்மலா.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …