தமிழ் சினிமா இயக்குநர்களில் மிக வித்யாசமானவர் வெற்றிமாறன். அவர் இயக்கும் படங்களில் மட்டுமல்ல, அவரது சிந்தனைகளும் மிக பண்பட்டதாகவே இருக்கிறது. அவருடன் படத்தில் பணிபுரிந்த நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இதை பல இடங்களில் வெளிப்படுத்தி உள்ளனர்.
சினிமாவில், தான் மட்டுமே வெற்றி பெற்றால் போதும் என நினைப்பவர்களே அதிகம். ஆனால், தன்னை சார்ந்தவர்களும், தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்து உழைப்பவர்களும் வெற்றி பெற வேண்டும். அவர்கள் செய்த உதவிக்கு ஏதேனும் கைமாறாக செய்ய வேண்டும் என்பதே வெற்றிமாறனின் எண்ணமாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன் வெற்றிமாறன் செய்த அந்த செயல், அதை அழகான வெளிப்படுத்தி இருக்கிறது.
காமெடி நடிகராக இருந்த சூரி, கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள படம் விடுதலை பாகம் 1, இந்த படத்தின் 2ம் பாகம், இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என தெரிகிறது.
இந்நிலையில், விடுதலை படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர்கள் 25 பேருக்கு, உத்திரமேரூர் அருகில், தலா ஒரு கிரவுண்ட் வீதம், 25 பேருக்கு 25 கிரவுண்ட் நிலம் வாங்கி தந்திருக்கிறார் வெற்றி மாறன். அதில் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ளவோ, அல்லது விவசாயம் செய்யவோ அவர்கள் விரும்பியபடி தீர்மானிக்கலாம் என்றும், வெற்றிமாறன் கூறி இருக்கிறார்
வெற்றிமாறனின் இந்த அதிரடி அன்பை கண்டு, உதவி இயக்குநர்கள் அனைவரும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.