தமிழ் சினிமாவில் அழகும், திறமையும் இருந்து பலரால் சாதிக்க முடியாமல் போய் உள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே முதல் படம் ஹிட்டாகி நல்ல வரவேற்பை கொடுக்கும். அந்த வகையில் நடிகை விசித்ரா திறமை இருந்தும் சரியான வாய்ப்பினை பெற முடியாமல் தவித்த நடிகைகளில் ஒருவர் என கூறலாம்.
தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சுமார் 80 நாட்களாக பிக் பாஸ் வீட்டில் நின்று விளையாடுகிறார். இதை அடுத்து இவர் வின்னர் ஆவாரா? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் இவர் சினிமாவில் இருந்து தான் விலக காரணம் என்னை ஒரு நடிகர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தார் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பரபரப்பு அடங்கி முடியாத நிலையில் தற்போது மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
அதுமட்டுமல்லாமல் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு காரணமே தன்னை ஒரு கவர்ச்சி நடிகை என்ற முத்திரையை குத்தி இருக்கிறார்கள். அதை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு நான் விளையாடுகிறேன் என்று கூறினார்.
இதை அடுத்து அந்த மற்றொரு பரபரப்பான விஷயம் என்னவென்றால் 2019-ல் இவர் ஊடக செய்தி பக்கத்தில் தமிழில் முன்னணி நடிகையாக வந்திருக்க வேண்டியது விதித்ரா. ஆனால் சத்யராஜ் மாமாவால் அது போய் விட்டது என்று ஒரு பதிவினை போட்டிருக்கிறார்.
இதற்கு என்ன காரணம் என்பதை மிகச் சிறப்பாக கூறியிருக்க கூடிய விசித்ரா, சத்தியராஜ் சார் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் என்றும் அவர் இயக்கிய முதல் படமான வில்லாதி வில்லன் படத்தில் எனக்கு ஒரு நல்ல ரோலை கொடுத்திருந்தார் என்றும் அவர் பதிவு செய்திருக்கிறார்.
அத்தோடு அந்த காலகட்டத்தில் தனக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரம் வந்ததால் நல்ல கதாபாத்திரங்களை என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று அந்த பதிவில் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஒருவேளை இவருக்கு அது போல கதாபாத்திரங்கள் அமைந்திருந்தால் கட்டாயம் முன்னணி நடிகையாக வளர்ந்து இருப்பார் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.