தொட்டதெல்லாம் வெற்றி தான்..! – வெட்டிவேர் விநாயகர் பற்றி பலருக்கும் தெரியாத ரகசியம்..!

ஆரம்ப நாட்களில் இருந்தே விநாயகரை வணங்கி வந்தால் வினைகள் நீங்குவதோடு எடுத்து செய்கின்ற காரியங்கள் அனைத்தும் விக்னமில்லாமல் முடியும் என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

 அப்படிப்பட்ட விநாயகரை நாம் வெட்டி வேரிலிருந்து உருவாக்கி வழிபாடு செய்வதின் மூலம் எண்ணற்ற பயன்கள் உருவாக்கிறது. இந்த வெட்டி வேருக்கு வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை தரக்கூடிய அற்புதமான ஆற்றல் உடையது.

மேலும் மருத்துவ பயன்கள் அதிகளவு இருக்கும் இந்த வெட்டிவேரில் ஆன்மீக விஷயமும் புதைந்துள்ளது.அது என்ன என்று தெரிந்தால் அனைவருக்கும் ஆச்சரியத்தை இது ஏற்படுத்தும்.

மேலும் வெட்டி வேரில் செய்யப்படும் விநாயகரை உங்கள் வீட்டு சுவற்றில் வைத்து வழிபடுவதால் வீட்டுக்கு தேவையான அனைத்து வளங்களும் கிடைப்பதோடு வீட்டில் இருக்கும் நபர்களின் ஆரோக்கியமும் அதிகரிக்குமாம்.

 மேலும் இது வீட்டில் இருக்கும் தேவையற்ற நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றி விடுவதால் வீடு முழுவதும் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரித்து இது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும்.

 தொழில் செய்யும் இடத்திலும் வியாபாரம் செய்யும் இடத்திலும் இந்த வெட்டிவேர் விநாயகரை வைத்து நீங்கள் வழிபடுவதன் மூலம் உங்களுக்கு வருமானம் பல மடங்கு பெருகுவதோடு கண் திருஷ்டியும் நீங்கும்.

இந்த வெட்டிவேரால் செய்யப்பட்ட விநாயகரை நீங்கள் தொடர்ந்து வழிபடுவதால் உங்களுக்கு ஏற்படும் காரிய தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் மற்றும் இளங்கையர்கள் இந்த விநாயகரை வழிபடுவதின் மூலம் விரைவில் வேலை வாய்ப்பு கிடைத்து விடும்.

 எந்த ஒரு தீய சக்தியையும் அண்டவிடாமல் இருக்கக்கூடிய இந்த வெட்டிவேர் விநாயகர் உங்கள் வீட்டில் இருந்தால் ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்ளலாம்.

 எனவே வெற்றியை விரும்பக்கூடிய மனிதர்கள் எல்லோரும் வெட்டிவேர் விநாயகரை உங்கள் வீட்டில் வைத்து வழிபட்டால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …