டைரக்டர் விக்னேஷ் சிவன் இப்படி ஒரு மனிதரா? வியப்படைந்த ரசிகர்கள்

போடா போடி  படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான்,  ராஜா ராணி படங்கள் மூலம், ரசிகர்களை கவர்ந்தார். நயன்தாராவை காதலித்து மணந்தார். கடந்தாண்டில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தந்தார்.

இவர் நயன்தாராவை திருமணம் செய்த பிறகு, இந்த காதல் தம்பதியின் புகைப்படங்கள், அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலானது. வாடகைத்தாய் மூலம் இரட்டைக்குழந்தை பெற்ற விவகாரம், சில மாதங்களுக்கு முன் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இயக்குவதாக இருந்த அஜித் படத்தில் இருந்தும் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதும் வைரலானது.

இந்நிலையில், சென்னை போலீசார் சார்பில், இளைஞர்களுக்காக, போதை ஒழிப்பு விழிப்புணர்வு சார்ந்த குறும்பட போட்டி நடத்தப்பட்டது. இதற்காக பெறப்பட்ட 300க்கும் மேற்பட்ட குறும்படங்களை பார்த்து, முதல் மூன்று பரிசுக்குரிய சிறந்த படங்களை தேர்வு செய்தது விக்னேஷ் சிவன் மற்றும் அவரது டீம்தான்.

இதன் பரிசளிப்பு விழா சமீபத்தில் நடந்தது. இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் நடிகரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து பாராட்டினார். அப்போது, விக்னேஷ் சிவனையும் பாராட்டினார். 

நன்றி தெரிவித்து இளைஞர்கள், மாணவர்கள்  மத்தியில் பேசிய விக்னேஷ் சிவன், பரிசுக்காக மட்டுமே, இதுபோன்ற சமுதாய கருத்துள்ள குறும்படங்களை எடுக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. எப்போதுமே, இதுபோன்ற விழிப்புணர்வு படங்களை எடுக்க, இளைஞர்கள் முன்வர வேண்டும், என அறிவுறுத்தினார். 

நானும் ரவுடிதான், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற ஜாலியான படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன், இவ்வளவு சமுதாய பொறுப்புணர்வுடன் பேசுகிறாரே, இவருக்குள்ளும் இப்படி ஒரு சமுதாய பொறுப்புணர்வு உள்ள மனிதர் இருக்கிறாரே, என்ற ஆச்சரியத்தை தந்துள்ளது. 

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …