காதல் செய்து வந்த போது சுற்றுலா சென்ற புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இளசுகளை ஏங்க வைத்தவர்கள் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் ஜோடி.
தற்போது திருமணத்திற்கு பின்பும் அப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். சுற்றுலா சென்று இருக்கும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அங்கிருந்து எடுத்துக்கொண்ட தங்களது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு பாடலாசிரியர் என்பது நமக்கு தெரியும் அப்படி இருக்கும் பொழுது தன்னுடைய காதல் மனைவி நயன்தாராவின் அழகு குறித்து கவிதை எழுதாமல் இருப்பாரா என்ன..? அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
ஸ்பெயின் நாட்டில் உள்ள பழமையான நகரங்களில் ஒன்றான வாலன்சியா என்ற நகரில் சமகால கட்டிடங்களுக்கு முன்பாக நடிகை நயன்தாரா எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.
என் உலக அழகியே.. உன்னை போல் ஒருத்தி இல்லையே.. என் உலக அழகியும்.. இவ்வுலகின் அழகும்.. இந்தியாவிலிருந்து வந்துள்ள அழகான பெண் நயன்தாரா என்று கவிதைகளை கிறுக்கி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
View this post on Instagram
தற்போது கடற்கரையில் படுக்கையை விரித்து அதில் நடிகை நயன்தாரா படுத்திருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார் இணையத்தில் வைரலாகி வருகிறது.