மசக்கை இல்ல… எப்படி விக்னேஷ், நயன் தம்பதிக்கு இரட்டை குழந்தை..? எங்கயோ இடிக்குதே…! – வெடித்த சர்ச்சை..!

கடந்த மாதம் ஜூன் 12 விக்னேஷ், நயன்தாரா திருமணம் கோலாகலமாக மகாபலிபுரம் ரிசோர்ட்டில் நடைபெற்றது.திருமணம் முடிந்த பின்பு தான் ஒப்புக்கொண்ட மற்றும் முதல் ஹிந்தி படமான ஜவானில் நடிக்கச் சென்றார். அதே சமயம் விக்னேஷ் சிவனும் செஸ் போட்டிகளை இயக்க சென்றார்.

தங்கள் படப்பிடிப்புகளை முடித்துக் கொண்டு திரும்பிய இருவரும் தேனிலவுக்கு சென்றனர். தேன்நிலவு முடித்து திரும்பிய தம்பதியினரை குறித்து  பல வதந்திகள் கிளம்பியது.

நயன்தாரா கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் அவர்களுக்கு குழந்தை பிறக்கப் போவதாகவும், அதனால் அவர் ஒத்துக் கொண்ட படங்களை முடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும், புதிய படங்களில் ஏதும் ஒப்பந்தமாகவில்லை என்றும் பல வதந்திகள் பரவியது.

அதே சமயம் நயன்தாராவிற்கு வயது அதிகமாக இருப்பதால் குழந்தை பிறப்பதில் சிக்கல் உள்ளதாகவும் அதனால் அவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டுள்ளனர் என்றும் ஒரு தரப்பினர் செய்திகளை பரப்பினர்.

இதற்கிடையில் நயன்தாரா நடித்த காட்பாதர் திரைப்படம் திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து மக்களுக்கு தனது வலைதள பக்கத்தில் நன்றியும் தெரிவித்துள்ளார் நயன்தாரா.

இப்படிப்பட்ட சூழலில் விக்னேஷ் சிவன் தனது twitter பக்கத்தில் நானும் நயனும் அம்மா அப்பா ஆகி விட்டோம் எங்கள் இருவருக்கும் ட்வின்ஸ் ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் மற்றும் நயன் இரண்டு குழந்தைகளின் பாதங்களைப் பிடித்து மொத்தம் வைப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

எங்கள் உயிராகவும், உலகமாகவும் இனி இவர்கள் இருப்பார்கள் என்றும், நாங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட விட்டோம் என்றும், அதனால் தான் எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்றும், இவர்களுக்கு உங்கள் அனைவரின் ஆசீர்வாதம் வேண்டும் என்றும் அவர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

திருமணமான ஐந்து மாதத்தில் இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.விக்னேஷ், நாயன் தம்பதியினர் வாடகை தாய் மூலமும் குழந்தை பெற்றுள்ளார்களா, அல்லது குழந்தைகளை தத்தெடுத்து உள்ளார்களா என்ற குழப்பத்தில் ரசிகர்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …