நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ படப்பிடிப்பு காஷ்மீரில், சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த படத்தில் விஜய் உடன் மிஷ்கின், சஞ்சய்தத் உள்ளிட்டோருடன், மலையாள பட நடிகர் பாபு ஆண்டனியும் நடித்திருக்கிறார்.
இவர் 1980-90களில், வில்லன் நடிகராக பல படங்களில் நடித்து மிரட்டியவர். தமிழில், சத்யராஜ் நடித்த பூவிழி வாசலிலே, சரத்குமார் நடித்த சூரியன் படங்களில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துவக்கத்தில் வில்லனாக நடித்த பாபு ஆண்டனி, கடந்த சில ஆண்டுகளாக குணச்சித்திர நடிப்புக்கு மாறிவிட்டார். தமிழில் யதார்த்த சினிமாவாக சில ஆண்டுகளுக்கு முன்வந்த காக்கா முட்டை படத்தில் பீட்சா கடை ஓனராக நடித்திருப்பார் பாபு ஆண்டனி. அதே போல், சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் இவர் நடித்திருப்பார்.
இப்போது, விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில், பாபு ஆண்டனியும் நடிக்கிறார். காஷ்மீரில் நடந்த படப்பிடிப்பில், அவர் பங்கேற்று நடித்துள்ளார்.
அப்போது நடிகர் விஜய், பாபு ஆண்டனியிடம் ‘நான் உங்கள் ரசிகன், நீங்கள் நடித்த படங்களை பார்த்திருக்கிறேன். உங்கள் நடிப்பு, எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். மேலும், படப்பிடிப்பு தளத்தில், பாபு ஆண்டனியிடம் மிகவும் பிரியமாக பேசி, அன்பாக நடந்துள்ளார் விஜய், தமிழில் மிகப்பெரிய நடிகராக உள்ள விஜய், வில்லன் நடிகரான தன்னிடம் காட்டும் மரியாதை, அன்பை கண்டு பூரித்துப்போயிருக்கிறார் பாபு ஆண்டனி.
விஜய் மட்டுமின்றி, படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படப்பிடிப்புக் குழுவினரும் அதேபோல், பாபு ஆண்டனியிடம பிரியமாக பேசி, மரியாதை தந்து குஷிப்படுத்தி உள்ளனர். காஷ்மீரில் நடந்த லியோ படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நடிகர் பாபு ஆண்டனி, தனது நண்பர்கள், உறவினர்களிடம் இதுபற்றி கூறி பெருமிதப்பட்டிருக்கிறார்.