தளபதி விஜய்யின் அறுபத்தி எட்டாவது படம் பற்றிய தகவல்… கசிந்ததா?

தமிழகத்தைப் பொருத்தவரை இது விஜய்க்கு என்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதில் குறிப்பாக பெண் ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.விஜய் என்று அழைப்பதை விட விஜய் அண்ணன் என்று அவர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.

தமிழக மக்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் முழு வீச்சில் நடித்துவருகிறார்.

 அடுத்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67 வது படத்தில் நடிக்கப்போகிறார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளிவந்து விட்டது.

 இதையடுத்து நடிகர் விஜய் தனது அறுபத்தி எட்டாவது படம் குறித்த தகவல்கள் இப்போது வெளிவந்து மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 68 வது படத்தை தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தை இயக்கிய மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அட்லியோடு  இணைந்து தெறி,மெர்சல், பிகில்  போன்ற படங்களை  இயக்கிய இவரோடு இணைந்து இந்த படம் வெளிவரும் என தெரியவந்துள்ளது.

 எடுத்து விஜய் ரசிகர்கள் 67 மற்றும் 68 என படங்களை அதிகப்படுத்திக் கொண்டு வரும் இவர் எப்போதும் இது போல் பல படங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 ஏற்கனவே இவரின் 70ஆவது படத்தை தோனி தயாரிப்பார் என்ற செய்திகள் அடிபட்டு வந்து உள்ள நிலையில் இப்போது 68வது படத்திற்கான அடிக்கல் போடபட்டுவிட்டது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும்  சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அவர்கள் தனது நூறாவது படத்தில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க வேண்டும் என்று அவரிடம் பேசி வந்திருக்கிறார்கள். அதுவும் கைகூடினால் விஜய் காட்டில் அதிக அளவு மழைதான் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.

வாரிசு  படமும் அஜீத் படத்தின் துணிவுக்கு மிகப் பெரிய காம்படிசானாக கருதக் கூடிய இந்த வேளையில் மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து இருப்பது கோடம்பாக்கத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …