அவ எல்லாத்துக்கும் திட்டிகிட்டே தான் இருப்பா.. தன் மனைவி குறித்து திரிஷாவிடம் கூறிய விஜய்..!

எம்ஜிஆர் – சிவாஜி, கமல் ரஜினிக்கு பின்பு திரை உலகை ஆளுகின்ற இரட்டைக் குழல் துப்பாக்கியாய் திகழும் தல அஜித் மற்றும் விஜய் பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை.

அந்த வகையில் தளபதி விஜய் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக தற்போது திகழ்ந்து வருகிறார்.

விஜய்..

பிரபல முன்னணி இயக்குனராக திகழ்ந்த எஸ் ஏ சந்திரசேகரனின் மகன் விஜய் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். தன் தந்தை ஒரு இயக்குனர் என்பதால் தமிழ் திரையுலகில் மிக எளிதில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

ஆரம்ப காலத்தில் இவர் நடிப்பில் வெளி வந்த திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. மேலும் பல படங்கள் தோல்வியை தான் தந்தது. இதனை அடுத்து தன்னை மெருகேற்றி தன்னுடைய கடுமையான உழைப்பால் தமிழ் திரை உலகில் தனக்கு என்று அசைக்க முடியாத இடத்தை பெற்றிருக்கிறார்.

கலவை ரீதியாக விமர்சனத்தை பெற்ற லியோ படத்தை அடுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று வருகிறது.

சங்கீதா விஜய்..

நடிகர் விஜய் ஆரம்ப காலத்தில் தன்னோடு இணைந்து நடித்த சங்கவியை காதலித்து இருந்தாலும், தந்தையின் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து முதல் காதலுக்கு பை, பை சொன்னவர். 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டு காதலிக்க ஆரம்பித்தார்.

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இவர்களது திருமணம் கோலாகலமாக நடை பெற்றதோடு தற்போது இவர்கள் இருவருக்கும் சஞ்சய், திவ்யா என்ற இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் சஞ்சய் தனது தாத்தாவைப் போல இயக்குனராக கிளம்பிவிட்டார்.

அண்மை காலமாகவே நடிகர் விஜய்க்கும் அவரது மனைவிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக பல்வேறு விதமான செய்திகள், வெளி வந்த நிலையில் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவல்களையும் இவர்கள் இருவருமே வெளியிடவில்லை.

தற்போது நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நீண்ட நாட்களுக்கு முன் பங்கேற்று இருக்கிறார்கள். அப்போது அந்த நிகழ்வில் தொகுப்பாளினியாக இருந்த அனு ஹாசன் உங்க மனைவி உங்களை என்ன சொல்லித் திட்டுவாங்க என்ற கேள்வியை விஜயிடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு விஜய் விளையாட்டாக அவ எல்லாத்துக்குமே திட்டிக்கிட்டே தான் இருப்பா.. என்ற பதிலை தந்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்திருந்த இந்த பேட்டியானது தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

இதனை அடுத்து வீட்டுக்கு வீடு வாசப்படி எந்த வீட்டில் தான் கணவன் மனைவி இடையே சண்டைகள் இல்லாமல் இருக்கு அப்படி இருந்தா தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். இதைத்தான் முன்னோர்கள் தமிழில் முன் ஊடல் அதன் பின் கூடல் என்று கூறி இருப்பதாக பேசி வருகிறார்கள்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *