ஐந்தாண்டு இடைவெளிகளுக்குப் பிறகு விஜய் ரசிகர்களை சந்திக்கும் மர்மம் என்ன? விடை தெரிய உடனே படியுங்கள்…!!

தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகர்களின் வரிசையில் திகழும் தளபதி விஜய் தற்போது வம்சி இயற்றி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில் படமானது வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என தெரியவந்துள்ளது.

ஏற்கனவே படத்தின் பாடல் வெளியீடு நிகழ்ந்துள்ளது. ரஞ்சிதமே பாடல் வெளியீட்டின் மூலம் அதிக அளவு ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மேலும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரக்கூடிய நடிகரான விஜய் இந்த படத்தில்  கட்டாய வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு இருப்பார் என்று தெரியவந்துள்ளது.

 இதனை அடுத்து இவர் படப்பிடிப்பு வேளையில் ரசிகர்களை 5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு எதற்காக நிகழ்ந்தது இதில் என்ன மர்மம் இருக்கிறது என்பது தெரியாமல் தற்போது அனைவரும் திணறி வருகிறார்கள்.

இந்த சந்திப்பானது பனையூரில் உள்ள விஜய்  மக்கள் இயக்க அலுவலக அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. மேலும் அந்தப் பகுதியைச் சார்ந்த ரசிகர்களை அழைத்து பேசி இருக்கிறார்.

அடுத்து நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அனைவரும் விஜய்யோடு கலந்துரையாடியதோடு மட்டுமல்லாமல் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிகழ்வுக்கு வந்திருந்த அனைத்து ரசிகர்களுக்கும் விஜய் சுடசுட பிரியாணியை வழங்கியிருக்கிறார்.

மேலும் தற்போது இந்த சந்திப்பானது மிகவும் பிரபலமான வகையில் ஆகிவிட்டது. இதற்கு காரணம் இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

எனவே இது ட்ரெண்டிங் ஆகிவிட்டதோடு மட்டுமல்லாமல் எதற்காக இந்த சந்திப்பு என்று அரசியல் வட்டாரங்களிலும் ஒரு பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அரசியலில் இறங்குவதற்கான சாத்திய கூறுகள் உள்ளபடி தான் இவரது ஒவ்வொரு படங்களிலும் வசனங்கள் பேசப்பட்டு வந்திருக்கிறது இதை எடுத்து இனி அரசியலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று ஒதுங்கி இருந்த இவர் மீண்டும் எதற்காக ரசிகர்களை சந்தித்து இருக்கிறார்.

 இது அரசியல் நிமித்தமான சந்திப்பா? அல்லது தனது வெளிவர இருக்கக்கூடிய படத்தை வெற்றியடைவதற்கான சந்திப்பா? என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தெரியும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …