டிஆர்பி இல்லையென்றால் சீரியல்களில் நிலை கெட் அவுட்… நிறுத்தப்படும் விஜய் டிவி சீரியல்கள் என்னென்ன தெரியுமா?

சீரியல்கள் என்றாலே அதற்கு சன் டிவி தான் என்ற இருந்த காலம் தற்போது மாறிவிட்டது. பெரும்பாலான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த விஜய் டிவி பிக் பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கட்டிப்போட்டு வந்த வேளையில் இவர்களும் சீரியலில் களம் கண்டு அந்த வரிசையில் ரசிகர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்கள்.

எனவே விஜய் டிவிக்கு இப்போது ஏகப்பட்ட தாய்மார்களின் சப்போர்ட் எக்கச்சக்கமாக உள்ளது.முன்பெல்லாம் சன் டிவியை மட்டும் நம்பி சீரியல் பார்த்து வந்த இல்லத்தரசிகள் அனைவரும் தற்போது மக்கள் டிவி, ஜீ டிவி, கலர்ஸ், விஜய் தொலைக்காட்சிகளில் சீரியல்களை பார்க்க துவங்கியிருப்பதால்  தரமான சீரியல்களை வழங்க வேண்டும் என்ற கருத்தோடு ஒவ்வொரு தொலைக்காட்சியும் தனது தொடர்களை ஒளிபரப்பு வருவதில் கவனத்தை செலுத்தி வருகிறது.

 அது மட்டுமல்லாமல் இதுவரை ஒளிபரப்பாகி வந்த விஜய் டிவியின் தொடர்களான நம்ம வீட்டுப் பொண்ணு, காற்றுக்கென்ன வேலி, மௌன ராகம் 2 போன்ற தொடர்கள் அதிக அளவு ரீச் அடையாத காரணத்தினாலும் டிஆர்பி ரேட்டிங்கில் தொலைக்காட்சிகளுக்கு கை கொடுக்காத காரணத்தினாலும் அந்தத் தொடர்களை நிறுத்துவது என்று தற்போது முடிவு செய்து இருக்கிறார்கள்.

 இந்த தகவல் தற்போது தான் வெளிவந்து இருக்கிறது.இதனை அடுத்து இந்த சீரியல்களை பார்த்து வரக்கூடிய ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

மேலும் குறிப்பிட்ட அளவு கால அவகாசம் கொடுத்தும் இவர்களால் ரீச் செய்ய முடியவில்லை என்றால் அந்த தொடர்களை நிறுத்தி விடலாம் என்று விஜய் டிவி தற்போது யோசித்து வருவதாக தெரியவந்துள்ளது.

 எனவே கட்டாயமாக தரம்மிக்க ரசிகர்கள் விரும்பக்கூடிய தொடர்களை மட்டுமே ஒளிபரப்பி தங்களுடைய ரசிகர் வட்டாரத்தை விரிவுபடுத்துவதோடு டிஆர்பி ரேட்டிங்கில் எகிறி நிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இது போன்ற முடிவை விஜய் டிவி எடுத்துள்ளது.

எனவே நம்ம வீட்டு பொண்ணு, காற்றுக்கென்ன வேலி, மௌன ராகம் 2 போன்ற சீரியல் விரைவில் முடிவுக்கு வரலாம் என்ற நிலையில் தான் தற்போது உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …