“படவாய்ப்புக்காக படுக்கை..” இவர்களுக்கு பங்கு இருக்கு..! – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய விஜயலட்சுமி..!

பிரபல நடிகை விஜயலட்சுமி பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இந்த விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை 600028 என்ற திரைப்படத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை விஜயலட்சுமி.

பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் அந்த போட்டியில் வெற்றியும் பெற்றார் கூடவே ஒரு கோடி ரூபாய் பரிசும் பெற்றார்.

இந்நிலையில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பேசி இருக்கிறார் நடிகை விஜயலட்சுமி. இதுகுறித்து அவர் கூறியதாவது, சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது. இதில் ஆண்களுக்கு மட்டும் பங்கு இல்லை பெண்களுக்கும் பங்கு இருக்கிறது.

நடிகையாக இருந்து கொண்டு சக நடிகைகள் பற்றி கூச்சமே இல்லாமல் இப்படி ஓப்பனாக பேசியுள்ளார் நடிகை விஜயலட்சுமி. பெண்கள் சம்மதிப்பதால் தானே மற்ற பெண்களிடமும் சில ஆண்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள். அவ்வளவு ஏன், என்னிடமும் இதுபோல் கேட்டுள்ளார்கள் என்று குண்டை தூக்கி போட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி.

இவருடைய இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவான கருத்துகளும் அதே சமயம் எதிரான கருத்துக்களும் பதிவாகி வருகின்றதை பார்க்க முடிகிறது. ஒரு நடிகை ஒருவருடன் அட்ஜஸ்ட் செய்து கொண்டாள் அந்த நபர் மீண்டும் இன்னொரு நடிகையை இப்படி ஆசைக்கு இணங்க சொல்வார் என்பதுபோல பேசியிருக்கிறார். இது எப்படி சரியானதாக இருக்கமுடியும் என்று ஒரு தரப்பினரும்..

எல்லா நடிகைகளும் கண்டிப்பாக முடியாது என்று சொல்லி பழக்க வேண்டும் சில நடிகைகள் தங்களுக்கான பட வாய்ப்புக்காகவும் தங்கள் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் மற்றும் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் காஸ்டிங் மேனேஜர்கள் உள்ளிட்டோருடன் சமரசம் செய்துகொண்டு எப்படியாவது சினிமா துறையில் நுழைந்து விட வேண்டும் என்ற எண்ணத்திலும் இப்படி செய்கிறார்கள்.

அவர்களை போன்ற நடிகைகளால் தான் இப்படியான இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அனைத்து நடிகைகளிடமும் இதனை எதிர்பார்க்கிறார்கள். அட்ஜஸ்ட் செய்யவில்லை என்றால் யார் அட்ஜஸ்ட் செய்கிறார்களோ அவர்களுக்கு வாய்ப்பு கொடுகிறார்கள்.. எனவே விஜயலட்சுமி கூறுவது உண்மை தான் என்று விஜயலட்சுமி கருத்துக்கு ஆதரவாகவும் பதிவு செய்து வருகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் சினிமா துறையில் மட்டுமல்ல எல்லா துறையிலுமே பெண்கள் மீதான இப்படியான அத்துமீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது நிதர்சனமாக உண்மை. இதனை, நாம் அன்றாடம் செய்திகளில் பார்க்க முடிகிறது.

ஆனால் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பலராலும் அறியப்பட்ட ஒருவராக இருப்பதால் அவர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது என்றவுடன் இது செய்தியாகின்றது. பெரிய பரபரப்புக்கு உள்ளாவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

மற்றபடி எல்லா துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் நடந்து கொண்டுதான் வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. இதனை பல நடிகைகளுமே தங்களுடைய கருத்தில் பதிவு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே தொணியில் தான் நடிகை விஜயலட்சுமியின் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …