விக்ரம் ‘பட்டைய கௌப்பிய’ படமும் இதுதான்; ‘குட்டையை குழப்பிய’ படமும் இதுதான்…

தமிழ் சினிமாவில், கமலுக்கு அடுத்தப்படியாக பெர்மான்ஸ் காட்டுபவர் நடிகர் சியான் விக்ரம்.

துவக்கத்தில், சரியான வாய்ப்புகள் இன்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணி செய்திருக்கிறார் விக்ரம்.  துணை நடிகராவும் சில படங்களில் நடித்திருக்கிறார். பாலா இயக்கத்தில் விக்ரம் ‘சேது‘ படத்தில் நடித்த பிறகு, அவரது சினிமா பயணம், வேறு பாதையில் பயணிக்க துவங்கியது.

தொடர்ந்து ‘காசி’ படம், நல்ல பெயரை பெற்றுத் தந்தது. ‘தில்’ படத்தில் அடிதடி நாயகனாக அசத்தினார். சாமுராய், கிங், ஜெமினி படங்களை அடுத்து, ‘துாள்’ படமும், ‘சாமி’ படமும் விக்ரமை டாப் லெவலுக்கு கொண்டு சென்றது. ஷங்கர் இயக்கத்தில் ‘அந்நியன்’ படம், விக்ரமை நடிப்பின் அசகாய சூரனாக வெளிப்படுத்தியது.

அதற்கு பின், பல படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது. கடந்தாண்டு மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் பாகம் 1ல், விக்ரம், கரிகாலச் சோழனாக நடித்திருந்தார். இப்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இயக்குநர் ஹரி, சிங்கம் படத்தை, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களாக எடுத்து ஹிட் அடித்தவர். அந்த வகையில், தனது இயக்கத்தில், விக்ரம் நடித்த சாமி படத்தை, சாமி 2ம் பாகமாக எடுத்தார். இதில் பாபி சிம்ஹா வில்லனாக நடித்திருந்தார். முதல் பாகம் சாமி படத்தில் விக்ரமுக்கு, த்ரிஷா ஜோடியாக நடித்திருந்த நிலையில், 2ம் பாகத்தில், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்திருந்தார்.

ஆனால் இந்த படம், எதிர்பார்த்த அளவுக்கு என்பதை விட சுமாரகக் கூட போகவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். இந்த படத்தில் நடிக்க, விக்ரம் பெற்ற சம்பளம் ரூ. 12 கோடியாம்.

ஆனால், விக்ரம் படங்களிலேயே விக்ரம் ரசிகர்களை வெறுப்பேற்றிய படம் இதுவாக மட்டுமே இருக்கும். சாமி முதல் படத்தில் பட்டையை கிளப்பிய விக்ரம், இந்த படத்தில் குட்டையை குழப்பி விட்டார் என்றே தோன்றுகிறது. கடந்தாண்டு வந்த ‘கோப்ரா’ படமும், சரியான வரவேற்பு பெறவில்லை.

பொன்னியின் செல்வம் 2ம் பாகத்தை, ரசிகர்கள் மட்டுமல்ல, விக்ரமும் அதிக ஆர்வத்துடன்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …