“கோப்ரா” படத்தின் பெயரை சொல்லும் போதே மிரட்டலாக உள்ளது. கூடவே சற்று பயமாகவும் இருக்கிறது.
பல கடுமையான போராட்டங்களுக்கு பின்னால் தனது பெயருக்கு முன் சியான் என்ற பட்டத்தை பெற்ற நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படம் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் வெளிவந்திருக்கிறது. இது ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னால் வெளி வரும் படம் என்பதால் சியான் விக்ரம் ரசிகர்களின் ஆவலையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதத்தில் கோப்ரா படம் இருக்குமா?
இப்படம் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளில் வெளிவந்து இருக்கிறது. இந்த படத்தை பார்க்க ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் நிரம்பி வழிவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
இப்படத்தை ” டிமான்டி காலனி ” திரைப்பட இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினியாக நடித்துள்ளார். படத்தில் உள்ள எல்லா லொக்கேஷன்களும் புவன் சீனிவாசனின் ஒளிப்பதிவு பார்க்க தூண்டும் வண்ணம் இருக்கிறது. தனது கம்பீரமான இசையால் ஏ ஆர் ரகுமான் படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இதில்
பாடல்களும் மிகவும் பிரமாதமாக உள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பின்னால் விக்ரம் இந்தப் படத்தில் ரசிகர்கள் மனதுக்கு ஏற்றபடி மிரட்டி நடித்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு தசாவதாரத்தில் நடித்த உலகநாயகனை விட வேறுபட்ட 20 வேடங்களில் மிகவும் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிகராக அறிமுகமாகி உள்ளார்.இவர்கள் உடன் பத்மப்ரியா, லால்,கனிகா,பாபு ஆண்டனிபோன்றவர்கள் நடித்துள்ளார்கள்.
அத்துடன் இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் சுமார் 10 கோடி வரை இருக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் கணிப்பு கூறியுள்ளது.
இந்த படம் நிச்சயமாக அவர் கேரியரில் ஒரு கம்பாக்ட் படமாக அமையும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
வினாயகர் சதுர்த்தியன்று வழி வந்த இந்தப்படம் விக்னம் இல்லாமல் ஓடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.