சர்ச்சையைக் கிளப்பும் இயக்குனர் பா ரஞ்சித் உடன் இணையும் சியான் விக்ரம்…!

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கோகிலா திரைப்படம் அவருக்கு கைகொடுக்காத போதிலும் பொன்னியின் செல்வன் படம் பெரிய வெற்றியை இவருக்கு தந்திருக்கிறது என்ற கதாபாத்திரத்தில் இவர் மிகவும் நன்றாக நடித்திருந்தாலும் காரணமாக அனைவரும் இவரை பாராட்டுகிறார்கள்.

 இதனை அடுத்து சியான் விக்ரம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகக்கூடிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் அனைத்தும் ஆந்திராவில் உள்ள கடப்பா பகுதியில் சுமார் 15 நாட்கள் நடக்கும் என்று தெரிகிறது அதற்கான முன்னேற்பாடுகளை முழுவீச்சில் தற்போது படக்குழுவினர் தொடங்கிவிட்டார்கள்.

 முதற்கட்ட படப்பிடிப்பு அக்டோபர் 18-ஆம் தேதி ஆந்திராவில் நடக்கும் அதன் பின்னர் மதுரையில் உள்ள சில பகுதிகளில் இந்த படம் பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 மிக முக்கியமான வேடத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள இந்த படத்தில் வேறு யார் யார் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் இருப்பார்கள் என்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

 சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது என்ற படம் சுமாரான வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் விக்ரமுடன் இணைந்து இவர் பணியாற்றக்கூடிய இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

 எனினும் இவர்கள் இருவரின் கூட்டணி சிறந்த முறையில் வெற்றிப்படத்தை தரும் என்ற நம்பிக்கையில் படத்தின் கதை என்ன எப்படி என்ற விஷயங்களை பற்றி தேடி அறிய ரசிகர்கள் தற்போது ஆவலாக காத்திருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் வெற்றியைத் தொடர்ந்து பா ரஞ்சித் உடன் இணைந்து இருக்கும்  சியான் விக்ரமுக்கு இந்த படம் சறுக்கலை கொடுக்குமா? என்பது போன்ற பாசிட்டிவ் கமெண்டுகள் அல்லாமல் நெகட்டிவ் கமெண்டுகள் தற்போது நிறைய வர ஆரம்பித்து விட்டது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …