சினிமாவில் புடவை சகிதமாக தோன்றும் நடிகை வினோதினி-யா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை வினோதினி வைத்தியநாதன், கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சிவரம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

கடந்த 1981-ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழில் காஞ்சிவரம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் பத்து வருடங்களில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் கவனம் செலுத்தி வரும் இவர் இரண்டு மொழிகளிலும் ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸிலும் தனது நடிப்பை தொடர்ந்து வருகிறார். கூத்துப்பட்டறையில் முறையான நடிப்பு பயிற்சி பெற்று நாடக நடிகையாக இருந்து வந்த இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் பாராட்டுகளைப் பெற்று அவருடன் சில படங்களில் பணியாற்றியும் உள்ளார்.

திரைப்படங்களில் புடவை சகிதமாகவே தோன்றும் இவர் சமீபத்தில் மாடர்ன் உடைகளில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

இந்தபுகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் புடவை சகிதமாக தோன்றும் வினோதினி வைத்தியநாதனா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …