காதல் கணவருடன் நெருக்கமாக Valentine’s day கொண்டாடிய விருமாண்டி அபிராமி..!

விருமாண்டி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்படும் நடிகையாக இருப்பவர் விருமாண்டி அபிராமி. இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து தமிழில் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். விருமாண்டி படத்தில் நடிப்பதற்கு முன்பு பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகை அபிராமி.

குறிப்பாக கடந்த 2001 ஆம் ஆண்டில் மட்டும் வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், மற்றும் சார்லி சாப்ளின் என்ற ஐந்து திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதன் பிறகு கார்மேகம் சமஸ்தானம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு விருமாண்டி என்ற திரைப்படத்தில் நடித்த இதுதான் இவருடைய கடைசி தமிழ் படமாக அமைந்தது.

இந்த படத்தில் அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த பிறகு நடிகர் கமலஹாசனுக்கும் நடிகை அபிராமிக்கும் இடையே ஏற்பட்ட காதலும் அதன் பிறகு ஏற்பட்ட மோதலும் தான் இவர் தமிழ் சினிமாவை விட்டு விலகுவதற்கு காரணமாக அமைந்தது என்ற செய்திகளும் வாய் வழியாக கோடம்பாக்கத்தில் நாம் கேட்க முடியும்.

அதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்ட இவர் 2015 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு மாற சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பு கதாபாத்திரங்களில் தோன்றியிருந்தார். தற்போது ஆர் யூ ஓகே பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் இவர் தற்போது தன்னுடைய காதலர் தினத்தை தன்னுடைய காதல் கணவருடன் நெருக்கமாக நின்றபடி வெளியிட்டு இருக்கக்கூடிய ரொமான்டிக் புகைப்படம் ஒன்று இணையத்தில் வருகின்றது.

Summary in English : Virumaandi Abhirami celebrated Valentine’s Day with her hubby in a unique and special way. The couple decided to celebrate the day of love by going on a romantic date and exchanging gifts.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …