வெண்ணிலா கபடி குழு, ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற வெற்றி படங்களை கொடுத்த நாயகன் தான் நடிகர் விஷ்ணு விஷால் இவர் தற்போது தமிழ் திரையுலகில் இருக்கும் திறமையான நடிகர்களில் ஒருவர் என்று கூறலாம்.
மேலும் இவர் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன், சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்றவற்றில் இவர் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் புகழடைந்தார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த எஃப் ஐ ஆர் திரைப்படம் நல்ல வெற்றியைத் தந்து இவருக்கு ஒரு நல்ல அந்தஸ்தையும் கொடுத்தது.
இப்படிப்பட்ட நிலையில் இவர் மறுமணம் செய்து கொண்ட நடிகர்களின் வரிசையில் வருகிறார். மேலும் இவர் தனது மனைவியோடு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தன் மனைவியோடு சென்று தரிசனம் செய்த போது பல ரசிகர்கள் இவரை சந்தித்துள்ளார்கள். அந்த சமயத்தில் இவர் பல ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்.
தற்போது அந்த புகைப்படங்கள் மற்றும் மனைவியோடு எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.
மேலும் தற்போது இவர் நடிப்பில் வெளிவந்திருக்கக் கூடிய கட்டா குஸ்தி திரைப்படம் மிக நல்ல முறையில் ஓட வேண்டும் வசூலில் வாரி குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்கச் சென்றாரா என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள் இதற்கான பதிலை விரைவில் இவர் தெரிவிப்பார் என்று தெரியவந்துள்ளது.
மேலும் ரசிகர்களோடு எந்தவித பாகுபாடு இல்லாமல் இவர் சுவாமி தரிசனம் செய்து முடித்த பின்பு புகைப்படங்களை எடுத்து இருப்பது அனேக ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
மேலும் நடிகர் என்ற துளியுண்டு கர்வம் இல்லாமல் அனைவரிடமும் பழகும் சகஜமான இவரது குணத்தை அனைவரும் பெருமையோடும் பாராட்டுதலோடும் பேசி வருகிறார்கள்.