“மொரட்டு கட்ட..” – சீரியலில் குடும்ப குத்துவிளக்காக வரும் விஜே அர்ச்சனா-வா இது..? – திணறும் ரசிகர்கள்..!

விஜே அர்ச்சனா : விஜய் தொலைக்காட்சியில் சமீபகாலமாக சினிமா தலைப்புகளைக் கொண்ட சீரியல்கள் பல ஒளிபரப்பாகி வருகின்றது.

கடைக்குட்டி சிங்கம், ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கு இருவர், ராஜா ராணி என்று சினிமா சீரியலை வைத்து சினிமா தலைப்புகளை வைத்து சீரியல்கள் வந்து கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான சீரியல்தான் ராஜா ராணி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த சீரியலில் கார்த்தி மற்றும் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஆகியோர் நடித்திருந்தனர்.

இவர்கள் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாய், தந்தை ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த, சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார் அர்ச்சனா. சென்னையைச் சேர்ந்த இவர் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர். இவருடைய அப்பா ஒரு கல்லூரியில் பேராசிரியர் ஆவார்.

இன்ஜினியரிங் படித்த அர்ச்சனாவிற்கு சிறுவயதிலிருந்து தொகுப்பாளினியாக வேண்டும் என்பதுதான் ஆசையாம்… கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது டப்ஸ்மாஷ் டிக் டாக் போன்ற சிறு வீடியோ செயலிகளில் தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அம்மணி.

காதல் பாடல்களை ரொமான்டிக் எக்ஸ்ப்ரஷன்களோடு டிக்டாக்கில் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்த இவருக்கு சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ராஜா-ராணி-சீரியல் வில்லியாக நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் அர்ச்சனாவா இது..? என்று ஷாக்காகி கிடக்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …