இதனால் தான் கணவரை டைவர்ஸ் பண்ணேன்..! – ஓப்பனாக போட்டு உடைத்த VJ மகேஸ்வரி..!

திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்ற VJ மகேஸ்வரி சட்ட போராட்டத்தின் படி தன்னுடைய மகனை தன்னுடைய வளர்த்து வருகிறார். பிரபல மியூசிக் தொலைக்காட்சி ஒன்றில் VJவாக பணியாற்றி வந்த இவர் ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டார் ஒரு குழந்தைக்கு தாயுமானார்.

இந்நிலையில் எதனால் நான் விவாகரத்து செய்து கொண்டேன் என்று ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார் நடிகை விஜே மகேஸ்வரி. இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விவாகரத்துக்குப் பிறகு தனியாளாக தன்னுடைய குழந்தையை வளர்த்து வரும் VJ மகேஸ்வரி நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. கடந்த 2007ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியை அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த VJ மகேஸ்வரி சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு ஊடக வெளிச்சத்தில் இருந்து மெல்ல மெல்ல தன்னை மறைத்துக் கொண்டார்.

திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்ற இவர் நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு தற்போது தன்னுடைய மகனை தன்னிடம் வளர்த்து வருகிறார். தொடர்ந்து டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என பிஸியாக இருக்கிறார் நடிகை VJ மகேஸ்வரி.

தன்னுடைய விவாகரத்து குறித்து பேசிய பொழுது என்னுடைய கணவரும் அவருடைய குடும்பத்தாரும் என்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தினார்கள் குடும்பத்தின் பெயர் கெட்டு போய்விடும் எனவே ஆங்கரிங் செய்யக் கூடாது நடிக்க கூடாது என்று கட்டளை இட்டனர்.

இப்படியான பல துன்புறுத்தல்களுக்கு பிறகு விவாகரத்து தான் சிறந்த வழி என்பதை முடிவு செய்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது என் மகனுடன் நாம் நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன். அவனை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறி இருக்கிறார் அவருடைய இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …