சன் டிவியில் தொகுப்பாளராக திரையுலகுக்கு அறிமுகமானவர் தொகுப்பாளினி மகேஸ்வரி. இவர் சன் டிவி தொடர்ந்து இசையருவி ஜீ டிவி போன்ற தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார்.
2018 ல் ஹரிஷ் கல்யாண் & ரைசா வில்சனுடன் பியார் பிரேமா காதல் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் 2021 ல் எழுத்தாளர், 2022 இல் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இவர் தாயுமானவர் மற்றும் புதுக்கவிதை போன்ற தொடர்களில் நாயகியாக நடித்துள்ளார்.
இவர் சிறு வயது முதலே மிகவும் கஷ்டப்பட்டு வந்ததாகவும் தனது தந்தை பிரிவிலிருந்து மீண்டு வந்து தான் இழந்தது அனைத்தையும் தனது திருமண வாழ்க்கையில் பெற்று விடலாம் என்றிருந்த இவருக்கு அதிலும் தோல்வி மட்டுமே கிடைத்தது.
எவ்வளவோ எதிர்பார்ப்புடன் திருமணம் செய்து கொண்ட இவர் ஒன்றரை ஆண்டுகளிலேயே திருமண உறவை முறித்துக் கொண்டுள்ளார்.இப்படி தனது கணவனும் தந்தையும் கைவிட்ட நிலையில் இவர் ஆண்களை சுயநலவாதிகள் குற்றம் கூறி இருக்கிறார்.
மேலும் தற்போது தனது மகனை நல்லபடியாக வளர்த்து சமுதாயத்தில் தனது தந்தை மற்றும் கணவன் போல் அல்லாது சிறந்த மனிதனாக வளர்ப்பேன் என்று கூறியுள்ளார்.
பெருந் தொற்று காலமான கொரோனா சமயத்தில்தான் தனது மகனுக்காக தான் சேர்த்து வைக்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது என்று உணர்ந்தாராம்.
அதனால் ஃபேஷன் டிசைனிங், இன்டீரியர் டிசைனிங் போன்ற படிப்புகளை முடித்து அத்துறைகளில் பணியாற்றியும் வந்துள்ளார்.
தனது வாழ்க்கையை மிகவும் பிசியாக மாற்றிக் கொண்டு தன் குழந்தைக்கு தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இருந்து வந்த இவருக்கு அதை நிறைவேற்றும் விதமாக தற்போது பிக் பாஸ் சீசன் 6 கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பல பிரபலங்களுக்கு அவர்களின் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை அடைவதற்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வாரா மகேஸ்வரி என்று தற்போது ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.