சரக்கு அடிச்சிருக்கேனா என்று கேட்ட கேள்வியால் என் மனசு உடைந்து போச்சு … புலம்பும் விஜே ரம்யா…!!

 விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர்தான் விஜே ரம்யா. முதல் முதலில் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு என்பதுதான். இதில் இவருக்கு  நல்ல பெயரும் புகழும் கிடைத்தது என்று கூறலாம்.

 மேலும் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல முன்னணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்ற தொகுப்பாளினியாக இன்று மாறி இருக்கிறார்.

சின்ன திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு நின்று விடாமல் வெள்ளித்திரையில் இவர் 2007 ஆம் ஆண்டு வெளியாகிய மொழி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

 அதனை அடுத்து தளபதி நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார். இவர் அவ்வப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதால் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் சரியாக இதனை தொடர்ந்து அமையவில்லை என்று கூறலாம்.

 மேலும் மன வாழ்க்கை சரியாக அமையாததன் காரணமாக இவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு அம்மா, அப்பா உடன் வாழ்ந்து வருகிறார். சென்னையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் நான் ஷூட்டிங் வரும்போது களைப்பாக இருப்பேன். மேலும் கேமராமேன் என் கண்ணை பார்த்து சிவப்பா இருக்கிறதால சரக்கு அடிச்சி இருக்கியா என்று கேட்பார்.

 இந்த கேள்வியை கேட்டவுடன் எனது இதயம் அங்கேயே உடைந்து விட்டது.மேலும் அவர் கேட்ட கேள்வி எவ்வளவு பெரிய தப்பு என்பதை எனக்கு அப்போது புரிந்தது.

 எங்களின் சூழ்நிலை உணராமல் இது போன்ற கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு வரக்கூடிய நபர்கள் சற்று மனசாட்சியோடு நடந்து கொண்டால் மிகவும் நல்லது என்று உணர்ச்சி பொங்க கூறி இருக்கிறார்.

 இதை அடுத்தாவது இதுபோன்று ஊடக துறையில் பணிபுரியும் பெண்களை பற்றி ஆபாசமாக பேசாமல் நிலைமையை உணர்ந்து நடந்து கொண்டால் நல்லது என்று தான் கூறத் தோன்றுகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …