லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்திற்குப் பின்பு திரை உலகில் செகண்ட் ரவுண்ட் அடிக்க வந்துவிட்டார். பல சிக்கல்களை கடந்து இவர் தன்னை உருக்கி நடித்த படம்தான் வெந்து தணிந்தது காடு. இயக்குனர் கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதைத்தொடர்ந்து சிம்புவின் பட வரிசைகளில் இது ஒரு பிளாக்பஸ்டர் படம் என்று கூறலாம்.
மிகவும் அதிக அளவு சிம்பு ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்று தான் கூற வேண்டும் இதையடுத்து இந்த படத்திற்கான சக்சஸ் மீட் சமீபத்தில் சென்னையில் நடந்தது.
இந்த சக்சஸ் மீட்டில் இயக்குனர் கவுதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு இப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடுவதோடு வெற்றிக்கு காரணமாக இருந்த மீடியா விற்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்தார்கள் அத்தோடு இந்த படம் சம்பந்தமாக எழுப்பப்பட்ட விமர்சனங்கள் கேள்விகள் அனைத்துமே 80% நேர்மறையான கருத்துக்கள் வெளியானது இந்த படத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணம் என்பதையும் கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து சிம்பு எந்த பட வெற்றியை பற்றி பேசும்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் முதல் முறையாக எனது படம் வெளியாகி சக்கை போடு போடுகிறது என்றால் அது இந்த வெந்து தணிந்தது காடு படத்திற்கு மட்டும்தான் இல்லை என்றால் சினிமாவைப் பொருத்தவரை ஒருவன் வருகிறான் என்றால் அவனை வளரவிடாமல் தட்டி ஒதுக்குபவர்கள் தான் அதிகம்.
அந்த வகையில் பல இன்னல்களை நடந்து நான் இன்று மீண்டும் நடித்திருக்கிறேன் என்றால் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை எனக்காக இயக்கிய டைரக்டர் கௌதம் மேனனுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
மேலும் இந்த படம் ரிலீஸ் ஆனவுடன் இது ரிலீஸ் ஆனது உண்மையா அல்லது கனவா என்று எண்ணும்படி என்னுடைய எண்ணம் பயம் கலந்த காணப்பட்டது ஆனால் படம் ரிலீஸ் ஆகி மிகச்சிறப்பாக ஓடுவதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இந்தப்படம் எனது ரசிகர்களுக்கு விருந்தாக இருப்பது எனக்கு இன்னும் கூடுதல் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது எந்த சபையில் இப்போது நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன் இதன் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் தயவு செய்து என்னுடைய ரசிகர்கள் நன்கு கத்தி என்ஜாய் செய்யக்கூடிய வகையில் அது இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றார்.