“நுரையீரலில் தேங்கிய சளியை நீக்க எளிமையான வழி..!” – 100% உண்மை செய்து பாருங்க..!

சளி பிடித்தால் சனியன் பிடித்தது போல ஏழு நாள் மருந்து உண்டாலும் சரி எடுத்துக் கொள்ளாவிட்டாலும் சரி அப்படியே மனிதர்களை பாடாயப்படுத்தும். அதுவும் நுரையீரலில் சளி கட்டி விட்டால் படாத அவஸ்தையே இல்லை என்று கூறக்கூடிய அளவுக்கு கடுமையான தாக்குதல்களுக்கு மனிதர்கள் ஆளாவார்கள்.

 இதன் மூலம் சுவாசிக்க பிரச்சனை ஏற்படும்.மேலும் சரியாக சுவாசிக்க முடியாது. இதனைத் தான் நெஞ்சு சளி என்று கூறியிருக்கிறார்கள். நெஞ்சு சளியின் அறிகுறி ஆரம்பத்தில் தெரியாது போகப்போக இருமல் வந்த பின்பு சளி கெட்டியாகி  வெளியேற ஆரம்பிக்கும்.

பொதுவாகவே இந்த சளியின் நிறம் பச்சை, மஞ்சள் வர்ணங்களில் இருக்கலாம். சளி பிடித்த பிறகு உங்களுக்கு மூக்கடைப்பு, தலைவலி, உடல் சோர்வு சேர்ந்திருக்கும்.

நுரையீரலில் தங்கி இருக்கும் சளியை அகற்றக் கூடிய  சில வழிமுறைகளை தற்போது எந்த கட்டுரை வழியாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

நாள்பட்ட நெஞ்சளியை குணமாக்குவதற்கு சிறிது நாட்கள் எடுத்தாலும் நீங்கள் முழு மனதோடு இதை செய்யும் போது கட்டாயம் உங்கள் சளி நுரையீரல் பகுதிகளில் இருந்து வெளியே வந்து மூச்சு விடுதலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும்.

👍தினமும் வெந்நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறுகள் கலந்து நன்றாக கலக்கி குடித்து வர நுரையீரலில் இருக்கக்கூடிய சளி கரைந்து வெளியே வரும்.

 👍பசும்பால் கலவையில் சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு குடிப்பதின் மூலம் மார்புச்சளி நீங்கும். குழந்தைகளுக்கு நெஞ்சு சளி பிடித்திருந்தால் அதோடு ஒரு சிட்டிகை  மிளகை சேர்த்து குடிக்கும் போது நெஞ்சு சளி அறவே நீங்கிவிடும்.

👍மலை நெல்லிச் சாறுடன் இரண்டு மிளகு சிறிதளவு தேன் ஆகியவற்றை கலந்து குடிப்பதன் மூலம் மூக்கடைப்பிலிருந்து விடுதலை கிடைப்பதோடு சளி தொல்லையிலிருந்தும் விரைவில் விடுதலை பெறலாம்.

👍நுரையீரலில் தங்கி இருக்கும் சளியை வெளியேற்றுவதில் புதினா இலை மற்றும் மிளகு முக்கிய பங்கினை வசிக்கிறது. இந்த இரண்டையும் வெறும் வயிற்றில் நீங்கள் மென்று தின்று வந்தால் உங்கள் சளி விரைவில் நீங்கும். அதில் எந்த அளவும் ஐயம் வேண்டாம்.

👍 கற்பூர வெற்றிலையை  விளக்கு முனையில் நல்லெண்ணெயை விட்டு சூடு படுத்தி நெஞ்சில் போட்டு வர நாள்பட்ட கெட்டிச்சளி விலகி வெளியே வரும்.

👍 அதுபோலவே வர தவிடை வாணலியில் போட்டு சூடு படுத்தி அந்த சூட்டை  நெஞ்சில் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் கட்டி இருக்கும் சளி இளகி மூக்கு வழியாக வெளியேறிவிடும்.

 மேற்குரிய முறைகளை நீங்கள் சரியாக செய்து வந்தால் கட்டாயம் நுரையீரலில் இருக்கக்கூடிய 100 சதவீதமான சளி வெளியேறி நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …