” உங்கள் வீட்டில் தீய சக்தி இருக்கா..!” – தீய சக்திகளை விரட்டி அடிக்க இந்த தூபங்கள் போதும்..!!

கடவுளை நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார்கள் என்ற வாக்கு அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அப்படி இருப்பவர்கள் வீட்டில் தீய சக்தி இருக்கு என்று தெரிந்து கொண்டால் அந்த தீய சக்திகளை விரட்டி எடுக்க கீழ்காணும் பொருட்களைக் கொண்டு தினமும் வீட்டில் தூபம் போடுவதன் மூலம் அந்த சக்திகளை எளிதில் விரட்டி அடிக்க முடியும் என்று சாஸ்திரங்கள் பகிர்ந்திருக்கிறது.

 அதுமட்டுமல்லாமல் வீட்டில் தீய சக்தி இல்லை எனினும் இந்த தூபத்தை போடுவதால் வீட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதை நீங்கள் எளிதில் உணர்ந்து கொள்ளலாம். அப்படி என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டு உங்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதை  இந்தக் கட்டுரையில் நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தீய சக்தியை நீக்கும் தூபம்

 வெண்கடுகு பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த வெண்கடுகு வெண்கணங்கள் என்று அழைக்கப்படுகிறது. இதில் கால பைரவர் இருப்பதாக ஐதீகம் உள்ளது. இந்த வெண்கடுகை பயன்படுத்துவதன் மூலம் கால பைரவரை நாம் வழிபடுவதற்கு சமமாக முன்னோர்கள் கருதி இருந்தார்கள்.

 எனவே இந்த வெண் கடுகையும் சாம்பிராணியும் இணைத்து தூபமாக வீட்டில் காட்டும் போது தீய சக்திகள் அடியோடு வெளியேறும்.

 அதுமட்டுமல்லாமல் வீட்டில் ஏற்படுகின்ற சின்ன சின்ன பிரச்சனைகள், சலசலப்பு, பிரிவு இவற்றையெல்லாம் நீக்கி ஒற்றுமையை வளர்க்கக்கூடிய ஆற்றல் இந்த தூபத்திற்கு உள்ளது.

 மேலும் பிரிந்து இருக்கக்கூடிய நபர்கள் குடும்பத்தோடு ஒன்று சேர்வதற்கும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவவும் இந்த வெண்கடுகு ஒரு எளிய பரிகாரமாக உள்ளது. மேலும் வீட்டில் இருப்பவர்கள் மேற்குரிய நன்மைகளை பெறுவதற்காக வெண்கடுகு, குங்கில்யம், நாட்டு சாம்பிராணி இந்த மூன்றையும் இணைத்து வீட்டில் உள்ள அறைகளில் முழுவதும் நீங்கள் தூபத்தை போட்டு காட்டுவதின் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும்.

 கட்டாயம் நீங்கள் இந்த மூன்று பொருட்களை உங்கள் வீட்டில் பயன்படுத்தி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தூபத்தை போட்டு செல்வத்தை அள்ளி குவிக்கலாம்.

மேலும் தினமும் எந்த தூபத்தை கடவுளுக்கு பூஜை அறையில் காட்டுவதோடு அனைத்து வீட்டு பகுதிகளிலும் நீங்கள் காட்டுவதின் மூலம் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் உண்டாகும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …