ஜோதிகா நடிச்சா.. நாம காலி.. – மாஸ்டர் ப்ளான் போட்ட இளம் நடிகை..! – விளாசி தள்ளும் நடிகை சூர்யா..!

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இந்த திரைப்படத்தில் நடிகை பூமிகா நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க கமிட் ஆனவர் நடிகை அசின் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

ஆனால் எதனால் இந்த படத்தில் இருந்து விலகினார் என்ற விவரம் யாருக்கும் தெரியாது. இந்நிலையில் இது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை விட ஜோதிகாவிற்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக தெரிகின்றது.

இதனால் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அதிகப்படியான காட்சிகளை சேர்க்க வேண்டும் மற்றும் கூடுதலாக ஒரு பாடலையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் நடிகை அசின்.

ஆனால் இயக்குனர் இதற்கு ஒப்புக் கொள்ளாமல் அடம்பிடித்துள்ளார். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பக்காவாக எழுதப்பட்டு முடித்துவிட்டது. தற்பொழுது இடையில் மாற்றம் செய்தால் படம் சொதப்பி விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.

அதனால் எக்காரணம் கொண்டும் திரைக்கதையிலும், கதையிலும் மாற்றம் செய்ய முடியாது என்று திடமாக கூறியிருக்கிறார். இயக்குனர் இதனால் அட்வான்சை பெற்றுக்கொண்டு படத்தில் நடிக்காமல் படத்திலிருந்து விலகியுள்ளார் நடிகை அசின்.

இது குறித்து பேசிய நடிகர் சூர்யா, விஜயின் சிவகாசி விக்ரமின் மஜா போன்ற படங்களில் நடிகை அசின் நடித்ததை விடவும் இந்த படத்தில் அவருக்கு பெயர் பெற்றுத் தரும் கதாபாத்திரம் தான்.

அதற்காக அவருக்கு பெரிய தொகையை அட்வான்ஸாக வழங்கப்பட்டது. அசின் முதலில் நடிக்க ஒப்புக்கொண்டார் பின்னர் அதை மாற்ற வேண்டும் என்று கூறியதால் அவரை அவரே படத்திலிருந்து விலகிவிட்டார்.

படத்தின் திரைக்கதையை எழுதி முடித்துவிட்ட நல்ல இயக்குனர் எவரும் படத்தின் திரைக்கதையில் மாற்றம் செய்ய மாட்டார்கள் இதனால் நடிகையை மாற்றிவிட்டார் படத்தின் இயக்குனர் என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

மேலும், ஜோதிகா நடிக்கும் படத்தில் நான் நடித்தால் நம்முடைய கதாபாத்திரம் டம்மி ஆகி விடும் என்று பயந்து தான் அசின் ஒதுங்கி விட்டார் என்று கூறப்படுகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …