யாஷிகா ஆனந்த் ( Yashika Anand ) தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகை. பெரும்பாலும் இவர் கவர்ச்சி நாயகியாகவே வலம் வருகிறார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். மாடலிங் துறையில் இருந்தவர். தமிழில், துருவங்கள் 16 படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். ஆனால், விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 2 மூலம், மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
Yashika Anandகவலை வேண்டாம், பாடம், இருட்டு அறையில் முரட்டுக்குத்து மணியார் குடும்பம், நோட்டா, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, மஹத் ராகவேந்திரா, கடமையைச் செய், ஜாம்பி, பாம்பாட்டம், இவன்தான் உத்தமன், ராஜ பீமா, சல்பர், த லெஜண்ட், பெஸ்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதில் சில படங்களில் பாடல் காட்சிகளில் மட்டுமே, சிறப்பு தோற்றம் தந்திருக்கிறார். ஜோடி நம்பர் ஒன் சீசன் 10 டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.
இவர் நடித்த படங்களில், கேரக்டர் ரோல் செய்யும் அளவுக்கு, இவருக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் அமையவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில், இவரது பங்களிப்பு மிக சிறப்பாக இருந்தது. அதே வேளையில், பிக்பாஸ் வீட்டுக்குள் உடல் பாகங்கள் அப்பட்டமாக தெரியும் அளவுக்கு, அரைகுறை ஆடைகளில் வலம் வந்து, பார்வையாளர்களை திணறடித்தார். போட்டிகளிலும், ஆர்வமாக பங்கேற்றார்.
Yashika Anandபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டால், சினிமாவில் வாய்ப்புகள் குவியும்; வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுவதை பொய்யாக்கும் விதமாக, அந்த சீசன் நேரத்தில் மட்டுமே, பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்கள் மதிக்கப்படுவார்கள். கவனிக்கப்படுவார்கள். அதற்கு பின், ஓரிரு படங்களில் நடிக்க வாய்ப்பு அமையுமே தவிர, மற்றபடி அவர்கள் வாழ்வில் திருப்பு முனையாக எல்லாம் பிக்பாஸ் அமைவதில்லை என்பதுதான் ஆறு ஆண்டுகளாக காலம் உணர்த்திய உண்மை. பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று ஜூலி, நடிகர் சரவணன், கஞ்சா கருப்பு, நடன மாஸ்டர் காயத்ரி, விஜே பிரியங்கா என, பார்வையாளர்கள் மத்தியில் மிக மிக அசிங்கப்பட்டவர்களும் உண்டு.
Yashika Anandஅந்த வகையில், பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் சொல்லப்படும் அளவுக்கு, அவரது சினிமா கலைப்பயணத்தில், பெரிய முன்னேற்றம் இதுவரை இல்லை என்றாலும், கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வருகிறார். அதே வேளையில், விபத்து ஒன்றில் கோர்ட்டில் நேரில் ஆஜராகவில்லை என்றால், கைது செய்யப்படும் நிலைக்கும் யாஷிகா ஆனந்த் தள்ளப்பட்டார்.
கடந்த 2021ம் ஆண்டில், சென்னை மகாபலிபுரம் அருகே, இரவு நேரத்தில் தனது ஆண் நண்பர்கள் இருவர் மற்றும் தோழி வள்ளி செட்டி பவானி ஆகியோருடன் யாஷிகா ஆனந்த் காரில் சென்றார். காரை யாஷிகா ஆனந்த் ஓட்டினார். இதில், கார் விபத்தில் சிக்கியது. இதில், காரில் பயணித்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட வள்ளி செட்டி பவானி, விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
Yashika Anandபலத்த காயமடைந்த மற்ற மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தனர். இந்த வழக்கு விசாரணை, சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த யாஷிகா ஆனந்த் மீது, இனியும் நேரில் ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கோர்ட் எச்சரித்தது. இதையடுத்து, யாஷிகா ஆனந்த 2 வாரங்களுக்கு முன், சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜரானார்.
Yashika Anandஇப்படிப்பட்ட பரபரப்பான நிலையிலும், சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக உள்ள யாஷிகா ஆனந்த், தினம் தினம் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் அப்டேட் செய்த லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் இவை.