அமைச்சரின் அரவணைப்பில் உடுக்கை இடுப்பு நடிகை… – ஓ.. இது தான் சமாச்சாராமா..?

உடுக்கை இடுப்பு நடிகை அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள விவாகரம் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. பொதுவாகவே சினிமா நடிகைகளை சுற்றி அவ்வப்போது அரசியல் சார்ந்த அரசியல் தொடர்புடைய நபர்கள் விவகாரமான வேலைகளில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக நடந்து வரக்கூடிய ஒரு விஷயம்.

இதில் பல விஷயங்கள் வதந்தியாகவே முடிந்திருக்கின்றன. பல விஷயங்கள் உண்மையாகவும் நடந்திருக்கின்றன. அந்த வகையில் உடுக்கை இடுப்பழகி என்ற பெயர் எடுத்த அது நடிகை தற்போது அமைச்சர் ஒருவரின் அரவணைப்பில் இருக்கிறார் என்ற தகவல் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

என்னதான் தமிழ் சினிமா ரசிகர்கள் ரசிக்கக்கூடிய அழகான நடிகையாக இருந்தாலும் கூட இவருக்கு பட வாய்ப்புகள் என்பது குறைந்த அளவிலேயே கிடைத்துவிடுகிறது.

வெகு சில திரைப்படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கிறார் இந்த உடுக்கை இடுப்பழகி நடிகை.

இந்நிலையில், காட்டு விலங்கு தயாரிப்பாளர் தயாரிக்க கூடிய புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் உடுக்கை இடுப்பழகி. இந்த காட்டு விலங்கு தயாரிப்பாளர் வேறு யாரும் கிடையாது மேலே சொன்ன அமைச்சரின் பினாமி தான்.

பெரிய இடத்தில் இருக்கும் சினிமா தயாரிப்பு நிறுவனம் பெரிய பெரிய படங்களை வாங்கி வெளியிட்டு லாபம் பார்த்தால்.. நாங்கள் சிறிய இடம்.., எனவே சிறிய பட்ஜெட் படங்களை வாங்கி லாபம் பார்த்துக் கொள்கிறோம் என்ற போக்கில் சில அமைச்சர்கள் செயல்பட்டு வருவதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அவர்கள் யாரும் தங்களை நேரடியாக இதில் ஈடுபடுத்திக்கொள்ளாமல் தன்னுடைய பினாமிகள் மூலம் இப்படியான வேலைகளை செய்து வருவதாக தகவல். இந்நிலையில், தன்னுடைய பினாமி தயாரிக்கக்கூடிய புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் உள்ள உடுக்கை இடுப்பழகியின் அறிமுகத்தைப் பெற்றிருக்கிறார் அமைச்சர்.

இவருடைய அறிமுகம் ஒரே மாதத்திற்குள் நட்பாக மாறி இருக்கிறது. அந்த நட்பு தற்போது அமைச்சரின் அரவணைப்பில் செல்லும் அளவுக்கு சென்றிருக்கிறது. நடிகையின் சொத்து மதிப்பை எப்படி புரட்டிப் பார்த்தாலும் 20 கோடியைத் தாண்டாது.

ஆனால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் உள்ள ஹாட் ஸ்பாட் ஒன்றில் இருக்க கூடிய கிட்டத்தட்ட 50 கோடிக்கும் அதிகமான மதிப்பு இருக்கக்கூடிய சொத்து ஒன்று நடிகையின் பெயரில் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு அமைச்சருடன் நெருக்கமாக இருக்கிறார் இடுப்பழகு நடிகை என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ.. என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …