அந்த விஷயத்தை பண்ணியும் வாய்ப்பு கிடைக்கலை.. சீரியல் நடிகை எடுத்த திடீர் முடிவு.!

இப்போதெல்லாம் பெரும்பாலும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு சினிமாவில் பெரும் நடிகைகளாக வேண்டும் என்பது பெரிய ஆசையாக இருந்து வருகிறது. முன்பெல்லாம் கதாநாயகியாக வேண்டும் என்று ஆசைப்படும் நடிகைகள் எடுத்த உடனேயே சினிமாவில் தான் சென்று வாய்ப்புகளை தேடிக்கொள்வார்கள்.

ஆனால் இப்பொழுது சினிமாவுக்கு நிகரான மார்க்கெட் என்பது சின்னத்திரையிலும் உருவாகி இருக்கிறது. அதனால் சின்ன திரையிலும் அதிகமாக முயற்சி செய்ய துவங்கியிருக்கின்றனர் நடிகைகள்.அந்த வகையில் சின்ன திரையில் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆவதன் மூலமாக எளிமையாக வெள்ளித்திரையில் வாய்ப்புகளை பெற்று விட முடியும் என்று நினைக்கின்றனர் சில நடிகைகள்.

அந்த விஷயத்தை பண்ணியும்

அப்படியாக பிரபல சீரியல் நடிகை ஆயிஷா ஜீனத் தொடர்ந்து வெள்ளித்திரையில் வாய்ப்புகளை பெறுவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு முதல் சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவராக இருக்கிறார்.

2017 இல் முதல் முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெடி ஸ்டெடி போ என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்குப் பிறகு அவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான மாயா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் போன்ற சீரியலில் வாய்ப்புகள் கிடைத்தது.

சீரியல் நடிகை

பொன்மகள் வந்தாள் சீரியல் இவருக்கு வேற மாதிரியான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து அதிக வரவேற்பு பெற்றார் ஆயிஷா ஜீனத் இதற்கு நடுவே இவருக்கு ஜீ தமிழ் சேனலிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

சொல்ல போனால் ஜீ தமிழில் தான் இவர் அதிகமான சீரியல்களில் நடித்திருக்கிறார். ஜீ தமிழில் வாய்ப்புகளை பெற்ற பிறகு சத்யா என்கிற ஒரு நாடகத்தில் நடித்தார். அந்த நாடகம் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

திடீர் முடிவு

அதனை தொடர்ந்து ராஜா மகள், செம்பருத்தி மாதிரியான நிறைய சீரியல்களில் இவர் நடித்து வந்தார். இதற்கு நடுவே தற்சமயம் சினிமாவில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். எனவே தொடர்ந்து சினிமாவிலும் முயற்சி செய்து வருகிறார்.

இதற்காக தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுவது, பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்பொழுது கவர்ச்சியான ஆடைகளை அணிந்து வருவது போன்ற விஷயங்களை செய்து வந்தார் இருந்தாலும் கூட அவருக்கு பட வாய்ப்புகள் என்று பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இந்த கவர்ச்சி எல்லாவற்றையும் ஓரம் கட்டி விட்டு மீண்டும் சீரியலில் கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார் ஆயிஷா ஜீனத்.

About Jiraya

Check Also

சண்டையை வேடிக்கை தான் பாக்கணும்.. மாகாபாவின் பதிலை கேட்டு விளாசும் நெட்டிசன்கள்!..

ஊரு இரண்டாகினால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் தான் தற்போது மணிமேகலை கிளப்பிவிட்டிருக்கும் பிரச்சனையால் இணையமே தீப்பிடித்து …

Exit mobile version