கடந்த சில தினங்களாகவே குக் வித் கோமாளி தொடர்பான பிரச்சனை என்பது சமூக வலைதளங்களில் அதிகமாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே எக்ஸ் வலைத்தளத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயராக மணிமேகலையின் பெயர் இருந்து வருகிறது.
மணிமேகலை கடந்த குக் வித் கோமாளி சீசன் 5 ஐ தொகுத்து வழங்கி வந்தார். இப்படி ஒரு தொகுப்பாளராக பணி புரிந்து கொண்டிருக்கையில் தொடர்ந்து இவருக்கு வி.ஜே பிரியங்கா தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
அவள பத்தி பேசுனா அவ்வளவுதான்
இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே வலுவான வாக்குவாதம் நடந்ததால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார் மணிமேகலை.
மேலும் இது குறித்த ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார். அது முதலே பலரும் விஜே பிரியங்காவிற்கு எதிராகவும் ஆதரவாகவும் பேசி வந்தனர். அதே சமயம் மணிமேகலைக்கு ஆதரவாகவும் நிறைய பேர் பேசி வந்தனர்.
இந்த நிலையில் இந்த விஷயம் குறித்து தற்சமயம் வெங்கடேஷ் பட் வாய் திறந்து இருக்கிறார். வெங்கடேஷ் பட் ஏற்கனவே விஜய் டிவியுடன் இருந்த சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சன் டிவிக்கு சென்று அங்கு பணிபுரிந்து வருகிறார்.
செருப்பால அடிப்பேன்
இந்த நிலையில் அவர் இந்த நிகழ்வு குறித்து கூறும் பொழுது இந்த நிகழ்வு மணிமேகலைக்கும் பிரியங்கா விற்கும் இடையேயான தனிப்பட்ட விஷயம் என்று தான் கூற வேண்டும், எனக்கு விஜே பிரியங்காவையும் பிடிக்கும் மணிமேகலையும் பிடிக்கும், வி ஜே பிரியங்காவை பொருத்தவரை ஒரு ஹார்ட் வொர்க்கர் அவர் என்று கூறவேண்டும்.
எந்த ஒரு கடினமான வேலையையும் செய்து காட்டக் கூடியவர் வி.ஜே பிரியங்கா. அதே சமயம் தன்னுடைய கல்லூரி காலத்திலேயே தொகுப்பாளராக அறிமுகமாகி தற்சமயம் தனக்கென ஒரு பெரிய ரசிக பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் மணிமேகலை. எனவே இவர்களது சண்டை என்பது என்னை பொறுத்தவரை ஒரு அக்கா தங்கை சண்டை போல தான் தெரிகிறது.
எனவே மணிமேகலை பிரியங்காவை பற்றி பேசி ஒரு வீடியோ வெளியிட்டால் அதற்கு பதிலை பிரியங்கா தான் கொடுக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் கொடுக்க கூடாது. நிறைய பேர் ஒவ்வொரு விதமாக அவர்களது சொந்த விஷயங்களை தவறாக பேசுவதை பார்க்க முடிகிறது அவர்களை எல்லாம் செருப்பால தான் அடிக்கணும் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் வெங்கடேஷ் பட்.