13 வருஷ காதல்.. கௌதமி மகளுக்கு கமல் கொடுத்த அந்த டார்ச்சர்.. அம்பலப்படுத்திய பிரபலம்..!

13 வருஷ காதல்.. கௌதமி மகளுக்கு கமல் கொடுத்த அந்த டார்ச்சர்.. அம்பலப்படுத்திய பிரபலம்..!

சிறுவயது முதலே தமிழ் சினிமாவில் நடித்து வரும் முக்கியமான ஒரு நடிகராக நடிகர் கமலஹாசன் இருந்து வருகிறார். நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட கமல்ஹாசன் ஏ.வி மெய்யப்ப செட்டியாரிடம் நேரில் நடித்துக் காட்டி வாய்ப்பை வாங்கியவர் என்பது பலரும் அறிந்த விஷயமே.

சொல்ல போனால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாற்று சினிமாவை கொண்டு வர வேண்டும் என்று நினைத்தவர் கமல்ஹாசன். அதற்காக நிறைய புதுவகை திரைப்படங்களையும் அவர் நடித்து வந்தார். இருந்தாலும் கூட கமலின் ஆக்ஷன் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்புகள்தான் எப்போதுமே அதிகமாக இருந்து வந்துள்ளன.

மாற்று சினிமா:

தற்சமயம் அவர் நடித்த விக்ரம் திரைப்படத்திற்கு கூட எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

13 வருஷ காதல்.. கௌதமி மகளுக்கு கமல் கொடுத்த அந்த டார்ச்சர்.. அம்பலப்படுத்திய பிரபலம்..!

அதே சமயம் கமல்ஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கை என்று எடுத்துக்கொண்டால் அது சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாகவே இருக்கும். சினிமாவில் கமலின் இளமை காலக்கட்டம் முழுவதுமே கமல்ஹாசன் குறித்து எக்கச்சக்கமான கிசுகிசுக்கள் வந்துள்ளன.

இளமைக்கால சர்ச்சைகள்:

அந்த அளவிற்கு ஒரு சர்ச்சைக்குரிய நபராகதான் கமல்ஹாசன் இருந்திருக்கிறார். கமல்ஹாசன் சினிமாவில் காதலித்த நடிகைகளில் நடிகை கௌதமி முக்கியமானவர். கிட்டத்தட்ட 13 வருடங்கள் நடிகை கௌதமியும் கமல்ஹாசனும் சேர்ந்து வாழ்ந்தனர்.

அந்த சமயத்தில் கௌதமிக்கு தீவிர உடல் பிரச்சினை ஏற்பட்டது அப்பொழுது கூட கௌதமியை கைவிடாத கமல்ஹாசன் அவருக்கு அனைத்து சேவைகளையும் செய்து வந்தார். அப்படியெல்லாம் இருந்தும் கூட ஒரு காலகட்டத்திற்கு பிறகு கௌதமி கமல்ஹாசனை விட்டு பிரிந்தார்.

ஜோடிகளின் பிரிவு:

அது திரைத்துறையினர் பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக இருந்தது. அவ்வளவு காதலுடன் சேர்ந்து வாழ்ந்த ஜோடிகள் எதற்காக பிரிந்தார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்தது.

13 வருஷ காதல்.. கௌதமி மகளுக்கு கமல் கொடுத்த அந்த டார்ச்சர்.. அம்பலப்படுத்திய பிரபலம்..!

அந்த சமயத்தில் கௌதமியிடம் இதற்கான காரணத்தை கேட்ட பொழுது எனது மகளின் பாதுகாப்புக்காக தான் கமலை விட்டு பிரிகிறேன் என்று அழுத்தமாக கூறியிருந்தார். கமல்ஹாசன் நடிகைகளிடம் அத்துமீறுவது போலவே கௌதமியின் மகளிடமும் அத்துமீறிவிட்டாரா? என்று இது குறித்து மக்கள் மத்தியில் பேச்சுக்கள் வரத் துவங்கின .

பத்திரிக்கையாளர் பேச்சு:

இது குறித்து பத்திரிக்கையாளர் சேகுவார் ஒரு பேட்டியில் பேசும்பொழுது கௌதமி தன்னுடைய மகளின் பாதுகாப்பு காரணமாகதான் கமலை விட்டு பிரிந்து சென்றதாக கூறுகிறார். கமலே இதற்கு முன்பு இரண்டு பேரை திருமணம் செய்து அவர்களை விட்டு பிரிந்துதான் கௌதமியுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்துள்ளார்.

அப்படி இருக்கும் பொழுது திருமணம் ஆகாமல் ஒருவருடன் இணைந்து வாழும் பொழுது ஒரு பெண் குழந்தை வைத்திருக்கிறோமே என்கிற பொறுப்பு கௌதமிக்கு இருந்திருக்க வேண்டும்.

அவர் திருமணமாகாமல் கமலுடன் சேர்ந்து வாழ்ந்து இருக்கக் கூடாது உங்களுடன் வாழுகிற ஒரு நபர் எப்படி உங்கள் குழந்தையை அவரது மகளாக பார்ப்பார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் பத்திரிகையாளர் சேகுவார்.

எனவே கமல்ஹாசனை விட்டு பிரிந்தது குறித்து வெளிப்படையான காரணத்தை கௌதமி மக்களிடம் கூற வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.