Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

நடிகர் சிவகுமார் மார்கெட் வீணாக போக காரணமே இது தான்.. போட்டு உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக ஒரு காலத்தில் வலம் வந்தவர் தான் நடிகர் சிவகுமார். மிகச்சிறந்த நடிகர் மிக ஒழுக்கமான மனிதர் என பெயர் எடுத்த இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார்.

நடிகர் சிவகுமார்:

இவரின் நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் 1965 வெளிவந்த “காக்கும் கரங்கள்” திரைப்படம் தான். அதை அடுத்து சரஸ்வதி சபதம், கந்தன் கருணை,காவல்காரன், கண் கண்ட தெய்வம், பணமா பாசமா, ஜீவனாம்சம் ,உயர்ந்த மனிதன், காவல் தெய்வம் இப்படி பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

ஹீரோவாக நடித்த முடித்த பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் இவர் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பெரும் புகழ்பெற்ற நடிகராக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையை சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட டாக்டர் காந்தராஜ் நடிகர் சிவகுமார் குறித்து பேசி இருக்கிறார்.

---- Advertisement ----

தொகுப்பாலினி… நடிகர் சிவகுமார் சினிமாவில் மிகவும் கண்ணியமான நடிகர் என்றும்,உத்தமபுத்திரன் பெண்களை ஏறெடுத்து கூட பார்க்காத மிகச்சிறந்த நடிகர் என பெண் மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் எடுத்து வைத்திருக்கிறார்.

பெண்கள் விஷயத்தில் சிவகுமார்…

ஒரு சில பேர் கிடையவே கிடையாது சிவகுமார் லேடிஸ் விஷயத்தில் அப்படி இப்படித்தான். அவருடைய பேச்சு மட்டும் தான் யோக்கியமாக இருக்கும் அவருடைய செயல்களும் மற்ற நடிகர்களைப் போலவே தான் என கூறுகிறார்கள் இது எந்த அளவிற்கு உண்மை? என குறித்து கேட்டதற்கு…

பதில் அளித்த காந்தராஜ், எனக்கு தெரியாது…. எங்க கண்ணுக்கு தெரிந்த வரைக்கும் சிவகுமார் கண்ணியமான மனிதராகத்தான் இருந்தார்.

அவருடைய அந்தரங்க வாழ்க்கையில் ஏதேனும் வித்தியாசங்கள் இருந்திருக்கலாம். அவருக்கு இருந்த அழகுக்கும் திறமைக்கும் நடிப்புக்கும் பெண்களை அவரை கண்டு மயங்கினார்கள்.

அவர் மீது நடிகைகள் விழுந்து விழுந்து நடித்த விவகாரம் எல்லாம் பேசப்பட்டது. அப்படித்தான் ஒரு ரொமான்டிக் காட்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது டைரக்டர் கட்டு என்றுசொல்லி கூட நடிகை சிவக்குமார் மீது படுத்து எழுந்துக்காமல் இருந்தார்.

கட் சொல்லியும் சிவகுமாரை விடாத நடிகைகள்:

என்ன அதுக்குள்ள கட் சொல்லிட்டீங்க என்று நடிகைகளே கேட்ட விவகாரமும் நடந்திருக்கிறது. நடிகைகள் சிவகுமார் மீது வழிந்து விழுந்தது நடிப்பார்கள்.

ஆனால், என்னை பொறுத்தவரை சிவகுமார் மிகவும் கண்ணியமாக தான் இருந்தார். அவ்வளவு வசீகர அழகை கொண்டும் கூட அவர் தனக்கான ஒழுக்கத்தை எப்போதும். விட்டதே கிடையாது.

அவரின் வசீகரத் தோற்றம் கொண்ட அந்த அழகுக்கு அந்த காலத்தில் அவருக்கு ஈடாக வேற எந்த ஒரு நடிகரும் இல்லை. எனவே அவரைப் பார்த்து மயங்காத நடிகைகள் இல்லை என்று தான் சொல்லணும்.

அவரைப் பார்த்து ஒரு பெண் மயங்கவில்லை என்று சொன்னால் அவளுக்கு கண் இல்லை… குருடு என்றுதான் அர்த்தம்.

சிவகுமார் மார்க்கெட் வீணா போக காரணம்:

ஆனால் அத்தனைப் பெண்கள் அவரை சுற்றி திரிந்தாலும் அவர் தேடிப் பிடித்துப் போய் கிராமத்தில் உள்ள தனது சொந்தக்காரப் பெண்ணை தானே திருமணம் செய்து கொண்டார்.

இதிலிருந்து தெரிந்து கொள்ளலாமே சிவக்குமார் எப்படிப்பட்டவர் என்று அவரைப் பற்றி கிசுகிசுகள் பெரிதாக வரவே இல்லை. அதுவே அவரது சினிமா வாழ்க்கைக்கு வீக்காக அமைந்துவிட்டது .

ஒருவேளை சிவகுமார் பற்றி நடிகைகளுடன் கிசுகிசுக்கள் வந்திருந்தால் அவர் தொடர்ந்து உச்ச நடிகராக சிறந்து விளங்கி இருக்கலாம்.

நடிகர்களுக்கு கிசுகிசு என்பது ரொம்ப முக்கியம். சில நடிகர்கள் தங்களுடைய திரைப்படங்கள் வெளியாகும் போது தன்னை பற்றி கிசுகிசுக்கள் எழுத சொல்வார்கள்.

அந்த அளவுக்கு சினிமாவில் மார்க்கெட் கிடைக்க வேண்டும் என்றால் அது கிசுகிசு மூலமாகத்தான் இருக்கும் என காந்தராஜ் என்ற பேட்டியில் கூறியிருந்தார். கிசுகிசுக்கள் வராததே சிவகுமாரின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. இதை நான் நேரடியாக அவரிடமே கூறியுள்ளேன் என கூறினார் காந்தராஜ்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top