எழுத்தும், பேச்சும் ஊருக்கு மட்டும் தானா? வெளிச்சத்துக்கு வருமா? கபிலன் மகள் தூரிகையின் தற்கொலைக்கான காரணம்!

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் பெண்களுக்கென்று ஒரு டிஜிட்டல் பத்திரிக்கையை நடத்தி  உங்களை உற்சாகப் படுத்தி முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஒரு முக்கியமான பெண் தூரிகை.

  கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்று கூறுவதற்கு ஏற்ப தனது தந்தையை போலவே இவரும் எழுதுவதில் வல்லவர் அதுமட்டுமில்லாமல் சொந்தமாக  பிசினஸ் மற்றும் பேஷன் டிசைனிங் செய்பவராக திகழ்ந்திருக்கிறார். உலகைச் சார்ந்த சில முக்கிய பிரமுகர்கள் மற்றும் நடிகர்களுக்கு இவர் பேஷன் டிசைனராக இருந்திருக்கிறார் பெண்களுக்கு தைரியத்தை தரக்கூடிய அட்வைஸ் கொலை செய்வதில் இவர் வல்லவர் அப்படியிருந்தும் இவர் திடீரென்று இந்த முடிவினை எடுப்பதற்கு காரணம் என்ன என்று பலவிதமான விமர்சனங்கள் வெளிவந்துள்ளது.

 இந்த நிலையில் இவரின் தற்கொலைக்கு மிக முக்கிய காரணம் திருமணம் என்று ஒரு தகவல் அடிபடுகிறது. திருமணத்துக்கு எல்லாம் ஒரு தைரியமான முன்னுதாரணமான பெண் தற்கொலை செய்துகொள்வார் என்று நீங்கள் யோசிப்பது மிகவும்  சரியான ஒன்றுதான்.

 இந்தக் கேள்விக்குப் பின்னால் எழுந்திருக்கும் பதில்கள் மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது சினிமா பின்னணியில் வளர்ந்து உள்ள இவர் ஒரு இயக்குனரை மிகவும் தீவிரமாக காதலித்து இருக்கிறார் அவர் அதை தன் தோழிகளிடம் நண்பர்களிடமோ ஏன் சோசியல் மீடியாவில் கூட வெளிப்படுத்த வில்லை அந்த அளவுக்கு இவருடைய காதலை தனக்குள் பொத்தி பாதுகாத்து வருகிறார்.

 ஆனால் இந்த விஷயம் எப்படியோ தூரிகையின் அப்பா கபிலனுக்கு தெரியவர வழக்கம்போல் சினிமா பாணியில் இவரும் இவர் ஜாதிய காரணம் காட்டி  காதலுக்கு குட்பை சொல்ல வலியுறுத்தியிருக்கிறார்.

இத்தோடு கவிஞர் கபிலன் நின்றுவிடவில்லை தன் மகளுக்கு இணையைத் தேட ஆரம்பித்து விட்டார் இதனால் மனம் உடைந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் தூரிகை. எவ்வளவு தான் தைரியமான பெண் என்றாலும் தான் விரும்பிய ஒருவர் கிடைக்கவில்லை என்ற ஒரு விரக்தியில் அவர் எந்த மாதிரியான தவறான முடிவை எடுத்திருக்கலாம் என்று அனைவரும் தற்போது கருதுகிறார்கள்.