நடிகர் அஜித்குமார் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் சற்று முன்பு உலகம் முழுதும் ரிலீசாகி இருக்கிறது. இந்த படத்தை வழக்கமான கொண்டாட்டத்துடன் அஜித் ரசிகர்கள் வரவேற்று இருக்கிறார்கள்.
கடந்த ஒரு ஆண்டுகளாக இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் மற்றும் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த திரைப்படத்தின் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படம் பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
நடிகர் அருண் விஜய் கூறிய பதிவில் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்து, ஆக்சன், திரைக்கதை மற்றும் நடிகர்களின் நடிப்பு படத்தில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய கருத்து.. என அனைத்தும் அருமையாக இருக்கிறது என்று பதிவு செய்திருக்கிறார்.
பிரபல விமர்சகர் ரமேஷ் பாலா பதிவிட்டுள்ள பதிவில் படத்தில் அஜித்தின் வசனம், அவருடைய ஸ்டைல், இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள்.. கொடுத்த காசை விட அதிகமான என்டர்டைன்மென்ட் என்று பதிவிட்டு இருக்கிறார்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பதிவிட்டுள்ள பதிவில் பிளாக்பஸ்டர் ஏ கே சார். என்ன ஒரு நடிப்பு.. என்ன ஒரு ஸ்டைல்.. ஒவ்வொரு சீனும் ஸ்டேடியத்தை விட்டு பறக்கக்கூடிய சிக்சர் ஆக இருக்கிறது. பட குழுவிற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்.
பிரபல திரைப்பட விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி பதிவிட்டுள்ள பதிவில் இப்படியான ஒரு கருத்தை சொன்னதற்கு இந்த கருத்தை சொல்ல வேண்டும் என்று கையில் எடுத்துக் கொண்டதற்கு நன்றிகள் என்று கூறியதுடன் இந்த படத்தின் இரண்டாம் பாகம் நிறைய தகவல்களை படம் பார்க்கக் கூடியவர்களுக்கு கொடுப்பதாக இருக்கிறது என்றும் பதிவேற்றிருக்கிறார்.
நடிகர் சரத்குமார் பதிவிட்டுள்ள பதிவில் இந்த விழா நேரத்தில் இந்த துணிவு திரைப்படத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். துணிவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் பதிவேற்றுகிறார்.
இன்னொரு ரசிகர் பதிவிட்டுள்ள பதிவில் 2K கிட்ஸ்களுக்கு உண்மையான AK என்றால் என்ன..? என்று இயக்குனர் ஹெச்.வினோத் இந்த படத்தின் மூலம் காட்டியிருக்கிறார்.
படத்தில் இடம்பெற்றுள்ள நடன காட்சிகள் இரண்டாம் பாதியில் இடம்பெற்றுள்ள சிறப்பான வசனங்கள். மேலும், பணம் தான் இந்த உலகத்தின் உச்சகட்ட வில்லன் என்ற காட்சிகள்.. என அருமையாக இந்த படம் வந்திருக்கிறது என பதிவு செய்திருக்கிறார்.
இயக்குனர் மோகன் ஜி வெளியிட்டுள்ள பதிவில் இந்த திரைப்படம் நிச்சயம் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படமாக இருக்கும் நன்றி அஜித்குமார் மற்றும் வினோத் சார் என்று பதிவிட்டு இருக்கிறார்
இன்றைக்கு மிகவும் தேவையான ஒரு கதை நடிகர் அஜித்குமார் இந்த படத்தை தேர்வு செய்ததற்கு மிகவும் நன்றி முதல் பாதி முழுவதும் நடிகர் அஜித்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இரண்டாம் பாதியில் முழுதும் படத்தின் கதை மற்றும் கைத்தட்டலுக்கு உகந்த வசனங்கள் அனைத்துமே திரையரங்கில் கொண்டாட வேண்டிய அம்சம் நிறைந்த காட்சிகள்.. நீண்ட நாட்களுக்கு பிறகு நன்றாக எழுதப்பட்ட ஒரு திரைப்படம் என்று பதிவிட்டு இருக்கிறார் இன்னொரு ரசிகர்.