விண்னை தொட்டிடலாம்… வா… பெண்னே…

பெண்னே உன்னை விண்ணளவு உயர்த்தும் சாவி தான் தன்னம்பிக்கை. பேராற்றல் மிக்க ஒரு இனம் உண்டு என்றால் அது பெண் இனம் தான் என்பதை புரிந்து கொள்.

பெண்னே இது தான்  உன் பாதை… இது தான் உன் பயணம் என முடிவு செய்து விட்டால் நீ உன் மனதோடு  உறவாடு பின் உன் கனவோடு உறவாடு.

அவ்வாறு உறவாடும் போது தான் உனக்கு ஏற்படும் சிரமங்கள் ஓடும். நீ உறவாடிக் கொண்டு போனால்  சிறிது தூரத்தில் தெரியும் ஒளிமயமான காலம் விரைவில் உன் காலடியில்…. பெண்னே.

கரணம் தப்பினால் மரணம் என நீ அஞ்சவேண்டாம்.  முன்னேறு! முன்னேறு எனும் வார்த்தைகள் உன்னை உற்சாகம் செய்யும், உற்சாகத்தை அள்ளித்தரும். நீ  உனக்கு போடப்பட்ட இரும்பு சங்கிலிகளை  இலவம் பஞ்சாய் மாற்றக்கூடிய திறன் படைத்தவள்.

உன் சோர்வையும், சோம்பேறித்தனத்தையும் தூர எறிந்துவிடு. சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் விடாமுயற்சியும் உன் கனவை நினைவாகி தடைகளை தவிடு பொடியாக்கும். 

எட்ட முடியாத உயரத்தை  எட்டிப்பிடிக்கும் ஏணியாய் கூட நீ பலருக்கு உதவி செய்யலாம். உன்னால் நிச்சயம் முடியும் எனும் நம்பிக்கை  உனக்குள் எப்போதும் இருக்கவேண்டும். 

உன்  நம்பிக்கையை செயல்படுத்த திட்டமிடுவதும் அதை நிறைவேற்ற முயற்சி செய்யும்போது தடைகளைக் கண்டு தளர்ந்து விடாமல் விடாமுயற்சியுடன் அந்த காரியத்தை சாதிக்கும் திசையை நோக்கி முன்னேறுவது தான் முக்கியம். 

நீ எதையும் வெல்ல வேண்டுமென்றால் “ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு”  காத்திருத்தல் வேண்டும். காத்திருத்தல் என்பது சுலபமான ஒன்றல்ல. நீ மந்த நிலையில் இருந்து விடக்கூடாது..

“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும்” எனும் கண்ணதாசனின் வரிகளை எண்ணிப் பார்க்கும்போது நீ வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்பதை அனுபவப்பூர்வமாக கற்றுக் கொள்ளும்போது தான் எதிர்நீச்சல் அடித்து வெற்றி அடைய முடியும்.

“சாவுக்கே சவால்” எனும் நாவலை எழுதியவருக்கு  இரண்டு கைகளும் இல்லை. பற்களால் பேனாவை பிடித்து இந்த நாவலை அவர் எழுதியுள்ளார். கால் விரல்களைப் பிடித்து எழுதுவதைவிட கடுமையானது உதடுகளில் பேனாவைப் பிடித்து எழுதுவது. எண்ணற்ற மொழிகளில் அச்சேறிய எந்த நாவல்  தன்னம்பிக்கைகாரர்களுக்கு ஒரு நல்ல உதாரணம்.

பெண்கள் எப்போதும் எவரையும் எதிர்பார்த்து வாழக் கூடாது. எவருக்கும் நாம் பாரமாகவும் வாழக்கூடாது. நமக்கு கிடைத்தது போதும் என்ற வாழ்க்கையே சிறப்பானது.வெற்றி கிடைக்கும் வரை கடுமையாக உழைக்கவேண்டும்.அப்படி செய்தால் வெற்றியை தடுக்க யாராலும் முடியாது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …