நடிகை திரிஷா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் 3 நடிகை வரிசையில் தொடர்ந்து முன்னணியில் இருக்கக்கூடிய நடிகை. இவர் தென்னிந்திய படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார்.
தமிழ் திரை உலகில் இவர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பிறகு கமல், ரஜினி, விஜய், அஜித், விக்ரம் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்க கூடிய இவர் பல வெற்றி படங்களை தந்தவர்.
தமிழக இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவர் ரசிகர்கள் மனதில் வாழ்ந்தார்.எனவே இவரை போல இருக்க கூடிய பெண்ணோடு தான் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ரசிகர்களின் மத்தியில் கிளப்பிவிட்டார்.
இதுவரை திருமணம் செய்து கொள்ளாத நடிகைகளில் ஒருவராக இருக்கக்கூடிய இவர் இனிமேல் காதலில் விழமாட்டேன் என அவர் அம்மாவுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் பக்காவான தனது நடிப்பை வெளிபடுத்தி பல படங்களை கைப்பற்றி இருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த ராங்கி திரைப்படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோலில் இவர் பக்காவாக நடித்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் படி ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டிருக்க கூடிய போட்டோவில் கருப்பு நிற உடையில் கியூட்டாக காட்சியளித்திருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு இளமை மீண்டும் திரும்பி வருகிறதா என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள். அந்த அளவு இளம் நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய அளவு மேனி அழகை எடுப்பாக காட்டி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
மேலும் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டோஸை திரும்பத் திரும்ப பார்த்து வருவதால் இந்த போட்டோ இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இளசுகளின் மனதில் ஏதேதோ எண்ணத்தை உருவாக்கி வைத்திருக்கும் இந்த போட்டோக்கள் அனைத்தும் நண்பர்களுக்கு ஷேர் செய்யப்படுவதால் திரிஷா மிகுந்த மகிழ்ச்சிகள் இருப்பதோடு இவரது ரசிகர்களின் காட்டிலும் அடை மழை எனக் கூறலாம்.