தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை திரிஷா பற்றி அதிம் பேச வேண்டிய அவசியம் இல்லை. இவர் தமிழைத் தவிர தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் இவர் குந்தவை கேரக்டரை மிக சூப்பராக செய்ததன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.
இதனை அடுத்து கடந்த ஆண்டு இறுதியில் ராங்கி என்ற படம் ரிலீஸ் ஆகி அதுவும் நல்ல முறையில் வெற்றியை தந்தது.
தற்போது டாப் ஹீரோயின் வரிசையில் இருக்கக்கூடிய இவர் பல படங்களில் நடித்த வருகிறார். அதுபோல விஜய் ,அஜித் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது இவர் பேட்டி ஒன்றில் பேசும் போது அவருக்கு பிடித்த உணவுகளை பற்றி கேட்டிருந்தார்கள். அப்போது அவரை மறந்த நிலையில் இவர் எப்போதும் பிராமின் சவுத் இந்திய உணவு வகைகள் என்றால் அதிகம் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் நார்த் இந்திய உணவுகள் என்றால் ரெஸ்டாரண்டில் இருந்து ஆர்டர் செய்து விரும்பி உண்பதாக சொல்லியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இவர் சைனீஸ் தாய் என பல வகை உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவேன் என்று கூறி இருக்கிறார்.
உணவு பற்றி கேட்கப்பட்ட கேள்வி இவர் ஜாதியை பற்றி குறிப்பிட்டு பேசியிருப்பதால் நெட்டிசன்கள் அதை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
இதனை அடுத்து நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக பலர் கமெண்டில் பேசி வருகிறார்கள். எனினும் குறிப்பிட்ட அந்த ஜாதி பெயரை கூறி அந்த உணவை மென்ஷன் செய்த இவருக்கு பல வகைகளில் நெகட்டிவ் கமாண்டுகள் வந்திருப்பதாக தெரிகிறது.
இது போன்ற சின்ன சின்ன விஷயங்களிலும் கூர்ந்து இப்படிப்பட்ட கருத்துக்களை கரெக்டாக தேர்வு செய்து சர்ச்சைகளுக்கு உள்ளாவது தற்போது சாதாரணமான விஷயமாகிவிட்டது.