நடிகை திரிஷா பச்சை நிற உடையில் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் முகத்தை பார்த்தாலே மூன்று நாளைக்கு தூக்கம் வராது போல இருக்கு என்று புலம்பல் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமான நடிகை திரிஷா அதனை தொடர்ந்து அடிக்கடி சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசிய திரைப்படத்தில் முழு நேர ஹீரோயினாக மாறினார்.
அதன் பிறகு குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நடிகர்கள் விஜய் அஜித் சூர்யா சிம்பு விக்ரம் தனுஷ் ரஜினிகாந்த் கமலஹாசன் என இவர் நடித்த முன்னணி நடிகர்களே இல்லை என்று கூறலாம்.
அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் ஓட்டம் காட்டியவர் நடிகை திரிஷா. 40 வயது தாண்டி விட்டாலும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் அம்மணி இதற்கு முக்கியமான காரணமாக இவருடைய திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நின்று போனதுதான் என்கிறார்கள்.
நடிகை திரிஷா பிரபல தயாரிப்பாளர் வருண்மணியன் என்பவர் உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால் இவருடைய திருமணம் நடக்கவில்லை நிச்சயதார்த்தத்தோடு இவருடைய திருமணம் நின்று விட்டது.
திருமணத்திற்கு முன்பே தயாரிப்பாளர் தன் மீது எழுப்பிய சந்தேக கேள்விகள் தான் நடிகர் திரிஷா திருமணத்தை நிறுத்துவதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள் ஆனால் உண்மை என்ன என்பது நடிகர் திரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கு மட்டுமே தெரிந்த விசியம்.
இது ஒரு பக்கம் இருக்க தற்பொழுதும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை திரிஷா. பொன்னியன் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கொடுத்தது.
இதனால், இவருடைய மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தில் ஜோடியாக ஒப்பந்தமாக இருக்கிறார். அவ்வப்போது பேட்டிகள் மற்றும் பட வெளியீடு விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகர் திரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது.
அந்த வகையில், தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.