இந்திய நடிகையாக திகழக்கூடிய நடிகை திரிஷா ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளின் வருகையில் இருக்கக்கூடியவர்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் இவர் குந்தவை கேரக்டரை நடித்திருந்தார். இதை பார்த்த பின் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு இளமை அப்படியே இன்னும் உள்ளது என்று புகழாரம் சூட்டி இருப்பதோடு மட்டுமல்லாமல் மேலும் பட வாய்ப்புகளை கிடைக்க வைக்கக் கூடிய வகையில் இவரது நடிப்பு இருந்தது.
இந்த படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களோடு இணைந்து நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்ததோடு மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகத்திலும் இவர் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது.
தற்போது குறிப்பிட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவரும் இவர் நடிப்பில் வெளிவந்த ராங்கி திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் இவருக்கு மீண்டும் ஒரு ஹிட் படத்தை தந்தது என்று கூறலாம்.
அடுத்த தற்போது சதுரங்க வேட்டை 2, ராம் பார்ட் 1 ,தி ரோடுஆகிய படங்களில் நடித்து வரும் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.
ஏற்கனவே இவர் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து இவர் மாஸ் ஹீரோவான விஜய்யின் வீட்டருகே 35 கோடி ரூபாய் செலவில் புதிய வீடு ஒன்றை வாங்கி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்து மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஏற்கனவே இவர் அஜித் வீட்ட அருகில் 5 கோடியில் பிளாட் ஒன்றை வாங்கி இருந்தார். அந்த பிளாட்டில் அவர் குடியிருந்தாரா இல்லையா என்ற தகவல்கள் இதுவரை வெளி வராத நிலையில் விஜய்யின் வீட்டருகே 35 கோடியில் புதிதாக வீடு வாங்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் பாராட்டுதலை பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வாய் பிளந்து விட்டார்கள் என்று கூறலாம்.
தற்போது எந்த வீட்டை அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். இதனைப் பார்த்து வரும் ரசிகர்கள் அவருக்கு பாராட்டுதல்களை உற்சாகமாக தந்திருக்கிறார்கள்.